5வது பந்தில் சூப்பர் ஓவர் பற்றி போல்ட்’டிடம் அதை சொன்னேன்.. ஐபிஎல் தான் எஞ்சாய்மெண்ட்.. ஹெட்மயர் பேட்டி

Shimron Hetmyer
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 27வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. சண்டிகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் மிகவும் போராடி 20 ஓவரில் 147/8 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அசுடோஸ் சர்மா 31, ஜிதேஷ் சர்மா 29 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் மற்றும் கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 148 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 39, டானுஷ் கோட்டியான் 24 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் 18, ரியான் பராக் 23, துருவ் ஜுரேல் 6, ரோவ்மன் போவல் 11 ரன்களில் அவுட்டானதால் ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

ஹெட்மயர் திட்டம்:
ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சிம்ரோன் ஹெட்மையர் 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது 2 சிக்ஸர்களை பறக்க விட்டார் அந்த வகையில் 27* (10) ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்த அவர் 19.5 ஓவரில் ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார். அதனால் 6 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.

மறுபுறம் 150 ரன்கள் கூட எடுக்காத பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாம் கரண், அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் 27* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சிம்ரோன் ஹெட்மயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் 5வது பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது ஒருவேளை தம்மால் சிக்சர் அடிக்க முடியாவிட்டாலும் சிங்கிள் எடுத்து எப்படியாவது போட்டியை சமன் செய்துவிடலாம் என்று எதிரே இருந்த ட்ரெண்ட் போல்ட்’டிடம் சொன்னதாக ஹெட்மயர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் கடைசியில் அதே பந்தில் தாம் சிக்ஸர் அடித்ததால் சூப்பர் ஓவருக்கு அவசியமின்றி போட்டி முடிந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முடிந்தளவுக்கு வலைப்பயிற்சியில் நான் பயிற்சி செய்கிறேன். எனவே சிக்ஸர்களை அடிப்பதற்கு என்னால் முடிந்தளவுக்கு நான் முயற்சிக்கிறேன். அதைப் பயன்படுத்தி இன்று என்னுடைய அணியை வெற்றி பெற வைத்ததில் மகிழ்ச்சி”

இதையும் படிங்க: 147 ரன்ஸ் சேசிங்கில் பஞ்சாப்பிடம் திணறிய ராஜஸ்தான்.. சஞ்சு சாம்சனின் தவறை ஹெட்மயர் சரிசெய்தது எப்படி?

“முதல் 2 பந்துகளில் எதிரணி கடுமையான அழுத்தத்தை கொடுத்தது. அதன் பின் நான் முடிந்தளவுக்கு தெளிவாக அடித்தேன். போல்ட்’டிடம் பேசிய போது அவர் நிலைமையை புரிந்து கொண்டதாக என்னிடம் சொன்னார். அப்போது ஒருவேளை நம்மால் போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் சமன் செய்வோம் என்று அவரிடம் 5வது பந்துக்கு முன் சொன்னேன். குடும்பத்தை விட்டு தூரத்தில் இருக்கும் இந்த சமயத்தில் ஒவ்வொரு தருணத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement