எந்த பிளேயருமே எங்களுக்கு வேண்டாம். மொத்தமாக அணியை கலைத்த – முன்னணி ஐ.பி.எல் அணி

Auction
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து 15-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி துவங்க இருக்கிறது என்ற தகவல் வெளியானதும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுத்துவங்கியுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்து 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

csk 1

அடுத்த ஆண்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதனால் தற்போது உள்ள 8 அணிகளிலும் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்க இருக்கும் நான்கு வீரர்கள் பற்றியே யோசித்துக் கொண்டு இருக்கின்றன.

- Advertisement -

அதுமட்டுமின்றி வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்காரணமாக தற்போது முழுவீச்சில் ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பல முக்கியமான வீரர்கள் ஏலத்திற்கு செல்கிறார்கள்.

pbks

இதனால் இந்த ஐபிஎல் ஏலமானது மிகவும் சுவாரஸ்யமாக அமைய உள்ளது. இந்நிலையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது அணியில் எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றும் அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டு புதிய வீரர்களை வாங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கடைசி சில ஆண்டுகளாகவே சிறப்பான வீரர்கள் அணியில் இடம் பெற்றிருந்தாலும் தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து வீரர்களையும் வெளியேற்றிவிட்டு புதியதாக அணியை கட்டமைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இதை பாருங்க அம்பயர் நீங்க பண்றதெல்லாம் சரியில்ல. அம்பயருடன் மல்லுக்கட்டி அஷ்வின் – நடந்தது என்ன?

அதன்படி எந்த ஒரு வீரரையும் ரீடெயின் செய்யாமல் அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி அனைத்து வீரர்களையும் களைத்து முழு அணியாக மாற்றும் ஒரே அணி பஞ்சாப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement