ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக காலம் வரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன் நடைபெற்ற 58 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மிகவும் தடுமாற்றமாகவே விளையாடியது. இதுவரை நடந்த 11 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்ற லக்னோ 6 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் தடுமாறி வருகிறது.
அந்த அணியின் இந்த தடுமாற்றமான ஆட்டத்துக்கு ரிஷப் பண்ட் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறார். இந்த வருடம் 27 கோடி என்ற வரலாறு காணாதத் தொகைக்கு லக்னோ அணிக்காக வாங்கப்பட்ட அவர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அந்த வாய்ப்பில் விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் அவர் பாராட்டும் அளவுக்கு எந்த நல்ல செயல்பாடுகளையும் வெளிப்படுத்தவில்லை.
தடுமாறும் பண்ட்:
அதை விட முக்கியமான பேட்டிங் துறையில் மிகவும் மோசமாக விளையாடிய அவர் 11 போட்டிகளில் வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோவுக்கு பெரிய பின்னடைவைக் கொடுத்தார். இந்நிலையில் பேட்டிங்கில் ரிஷப் பண்ட் ஷாட் செலக்சன் மிகவும் தவறாக இருப்பதே தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். மேலும் அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன்ஷிப்பில் ரிஷப் பண்ட் பொறுமையை இழப்பது எதிரணிகளுக்கு சாதகத்தை கொடுப்பதாக சித்து கூறியுள்ளார்.
எனவே அவற்றை சரி செய்ய அவர் தோனியைப் பின்பற்ற வேண்டும் என்றும் சித்து ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷாட் செலக்சன் அவரிடம் இருக்கும் முக்கிய பிரச்சினையாகும். தடுமாறும் அனைத்து சமயங்களிலும் உங்களால் பந்துகளை உங்களது வழியில் அடிக்க முடியாது”
சித்து அட்வைஸ்:
“ஒருவேளை பெயரில் இருக்கும் அழுத்தம் அவரை எடைப் போட்டு ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லை என்று நினைக்கிறேன். தடுமாற்றமாக விளையாடும் போது அவரிடம் விரக்தி தெரிகிறது. கேப்டனாக அவர் தன்னுடைய பொறுமையை இழக்கிறார். அது எதிரணிக்கு ஒரு முனையை கொடுக்கிறது. நீங்கள் தோனியை பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: ஆர்சிபி, கோலி ரசிகர்களுக்கு ஆப்படித்த போலீஸ்.. சிஎஸ்கே அணியை சாய்த்த பின் செய்த முட்டாள்தனமான செயல்
“அமைதி மற்றும் பொறுமையால் தோனி எதையும் எதிரணிக்கு விட்டுக் கொடுப்பதில்லை. அதே போல ரிஷப் பண்ட் தன்னுடைய மனநிலையை மாற்றியாமைக்க வேண்டும். குறிப்பாக தனது ஷாட் செலக்சனில் தெளிவாக இருக்க வேண்டிய அவர் மீண்டும் அடிப்படைக்குச் சென்று பயிற்சிகளை எடுத்து வர வேண்டும்” என்று கூறினார். மொத்தத்தில் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே தொடர்ச்சியாக அசத்தியதில்லை என்பதை ரிசப் பண்ட் மீண்டும் நிரூபித்துள்ளார்.