ஆர்சிபி, கோலி ரசிகர்களுக்கு ஆப்படித்த போலீஸ்.. சிஎஸ்கே அணியை சாய்த்த பின் செய்த முட்டாள்தனமான செயல்

RCB Fans
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வருடம் இதுவரை நடைபெற்ற 58 போட்டிகளில் நிறைய போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதில் பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதியப் போட்டி ரசிகர்களுக்கு உச்சகட்ட திரில்லர் விருந்து படைத்தது என்றே சொல்லலாம்.

மே மூன்றாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 214 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் விராட் கோலி 62, ஜேக்கப் பேத்தல் 55, செபார்ட் 53* ரன்கள் எடுத்தனர். அதைத் துரத்திய சென்னைக்கு இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே 94 ரன்கள் விளாசி வெற்றிக்குப் போராடினார்.

- Advertisement -

முட்டாள்தனமான செயல்:

ஆனால் கடைசி நேரத்தில் தோனி, துபே உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஃபினிஷிங் செய்ய தவறினர். அதனால் ஜடேஜா 77* ரன்கள் எடுத்தும் சிஎஸ்கே வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த வெற்றியை மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினர். ஆனால் அவற்றின் உச்சமாக 3 ஆர்சிபி ரசிகர்கள் கிடா வெட்டி வெற்றியைக் கொண்டாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு உள்ளூர் கிராமத்தில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவில் பாலையா, ஜெயன்னா, திப்பேஸ்வாமி என்ற பெயரைக் கொண்ட 3 ஆர்சிபி ரசிகர்கள் விராட் கோலிக்கு கட் அவுட் வைத்துள்ளார்கள். அதோடு நிற்காத அவர்கள் அந்த போஸ்டருக்கு ஒரு கிடாவை பலி கொடுத்து அபிஷேகம் செய்துள்ளனர்.

- Advertisement -

ஆப்படித்த போலீஸ்:

அதை வீடியோ எடுத்த அவர்கள் சமூக வலைதளங்களில் போட்டுள்ளார்கள். 20 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அந்த வீடியோ பற்றி உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக தெரிகிறது. அதை ஏற்றுக்கொண்ட காவல் அதிகாரிகள் அந்த மூன்று ஆர்சிபி ரசிகர்களையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய அணிக்காக கடந்த 2-3 வருஷமா தியாகி மாதிரி ஆடுறது இவர்தான் – ரோஹித் சர்மா நெகிழ்ச்சி

பொதுவாக மத ரீதியான நம்பிக்கைக்காக கிடா பலியிடுவது வழக்கமாகும். ஆனால் இங்கு சாதாரண ஒரு விளையாட்டு தொடரில் சிஎஸ்கே அணியை தோற்கடித்ததற்காக கிடாவை பலி கொடுத்து ஆர்சிபி ரசிகர்கள் முட்டாள் தனமான செயலில் ஈடுபட்டுள்ளார்கள். அதனால் அவர்களைப் பிடித்த போலீஸ் அதிகாரிகள் சரியான ஆப்பை அடித்துள்ளதாக இதர ரசிகர்கள் சமூக வலைதலங்களில் பேசுகின்றனர்.

Advertisement