இந்திய அணிக்காக கடந்த 2-3 வருஷமா தியாகி மாதிரி ஆடுறது இவர்தான் – ரோஹித் சர்மா நெகிழ்ச்சி

Rohit
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா அடுத்ததாக நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இந்திய அணியின் முக்கியமான வீரர் இவர்தான் : ரோஹித் சர்மா

இந்நிலையில் அடுத்த உலக டெஸ்ட் த்தை சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சியில் முழுவதுமாக அவரால் விளையாட முடியாத காரணத்தால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ள அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணிக்காக விளையாடி அந்த கோப்பையையும் வெற்றி பெற்ற பின்னரே அனைத்து வகையான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் தான் பார்த்த சில நிகழ்வுகளையும், தனக்கு பிடித்த சில வீரர்கள் குறித்தும் ரோகித் சர்மா சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இந்திய அணியில் முக்கியமான வீரராக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் கே.எல் ராகுல் தெரிவதாக அவரை பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் :

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கே.எல் ராகுல் எங்களது அணிக்கு மிக முக்கியமான வீரராக இருந்திருக்கிறார். ஏனெனில் இந்திய அணி எப்போதெல்லாம் நெருக்கடியான சமயங்களை சந்திக்கிறதோ அப்போது சிறப்பாக செயல்படும் வீரராக கே.எல் ராகுலை நான் பார்த்தேன். ஏனெனில் இந்திய அணிக்காக அவர் எல்லா வித பணிகளையும் செய்கிறார்.

- Advertisement -

குறிப்பாக கீப்பிங் செய்வது மட்டும் இன்றி பேட்டிங்கில் எந்த ஒரு இடத்திலும் அவர் தயக்கமின்றி விளையாடுகிறார். அதோடு தேவைப்பட்டால் சாதாரண வீரராக ஃபீல்டிங்கும் செய்கிறார். இந்திய அணிக்காக எந்த ஒரு ரோலையும் தயக்கமின்றி செய்யும் அவர் வெற்றிக்காக தனது முழு திறனையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : சட்டி உடைந்தது போல் ஆர்சிபி’யின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு நொறுங்குகிறதா? விவரம் இதோ

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அவர் நிலையான பேட்டிங் ஆர்டரில் விளையாடவில்லை என்றாலும் இந்திய அணிக்கு எங்கெங்கெல்லாம் அவருடைய ஆட்டம் தேவைப்படுகிறதோ அங்கெங்கெல்லாம் களமிறங்கி வெற்றியைத் தேடித்தந்துள்ளார். குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபிட் தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு அவரின் பங்கு மிகப் பெரியது என ரோஹித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement