சட்டி உடைந்தது போல் ஆர்சிபி’யின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு நொறுங்குகிறதா? விவரம் இதோ

IPL RCB
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பார்க்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிலும் மே 8ஆம் தேதி தரம்சாலாவில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி பாதியிலேயே மின்விளக்குகள் அணைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அங்கிருந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை பிசிசிஐ பாதுகாப்பாக வெளியேற்றியது. தற்போதைய நிலைமையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே விரைவில் அமைதி நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. எனவே ஐபிஎல் 2025 தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ கூறியுள்ளது.

- Advertisement -

உடைந்த சட்டி:

மேலும் எஞ்சியுள்ள 16 போட்டிகளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த செய்தி மற்றவர்களைக் காட்டிலும் ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த வருடம் ரஜத் படிதார் தலைமையில் அபாரமாக விளையாடிய பெங்களூரு அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் ஜொலிக்கிறது.

குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளை அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு தோற்கடித்தது. அதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் முதல் 5 வெளியூர் போட்டிகளிலும் வென்ற முதல் அணியாக ஆர்சிபி சரித்திர சாதனை படைத்தது. அந்த வகையில் முதல் கோப்பையை வெல்லும் கனவுடன் ஆர்சிபி அணி நல்ல வேகத்தில் சிறந்த ஃபார்மில் விளையாடி வருகிறது.

- Advertisement -

கோப்பை வெல்லுமா:

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐபிஎல் 2025 தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது ஆர்சிபி அணிக்கு சட்டி உடைந்தது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஏனெனில் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு நல்ல ஃபார்ம் மற்றும் வேகம் (ஃமொமென்டம்) அவசியம் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் தற்போது ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆர்சிபி அணி போடும் வெற்றி நடையின் வேகம் உடைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025 தொடர் பாதியிலேயே ரத்து.. எஞ்சிய மீண்டும் எப்போது நடக்கும்? வெளியான தகவல்

எனவே சில மாதங்கள் கழித்து எஞ்சியுள்ள போட்டி நடைபெறும் போது ஆர்சிபி வீரர்கள் அதே ஃபார்மில் இருப்பார்களா? என்பது சந்தேகமாகும். எடுத்துக்காட்டாக 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் முதல் நாளில் அபாரமாக விளையாடிய இந்தியா அடுத்த நாளில் சொதப்பி தோற்றதை சொல்லலாம். அந்த அனைத்தையும் தாண்டி எஞ்சிய போட்டிகள் நடக்கும் போது மன உறுதியுடன் விளையாடி ஆர்சிபி முதல் கோப்பையை முத்தமிடுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement