ஐபிஎல் 2025 தொடர் பாதியிலேயே ரத்து.. எஞ்சிய மீண்டும் எப்போது நடக்கும்? வெளியான தகவல்

IPL 2025 Teams
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் கால வரையின்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைக்கு இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதன் காரணமாக மே 8ஆம் தேதி தரம்சாலாவில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி திடீரென மின்விளக்குகள் அணைக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் போட்டியை பாதியிலேயே நிறுத்திய பிசிசிஐ வீரர்கள் மற்றும் ரசிகர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது. அந்த சூழ்நிலையில் இந்தியா மீது தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் பாதியிலேயே ரத்து:

அதற்கு பதிலடிக் கொடுத்து வரும் இந்திய ராணுவத்தினர் தற்போது பாகிஸ்தானுக்குள்ளேயே நுழைந்து தரமான பதிலடிகளைக் கொடுத்து வருகிறார்கள். அதனால் நிலைமைகள் எப்போது சீராகும் என்பது சரியாக தெரியாமல் இருக்கிறது. எனவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மைதானத்தில் அமர்ந்து பார்க்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக 2025 ஐபிஎல் தொடரை தற்காலிகமாக கால வரையின்றி நிறுத்தி வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. தற்போதைய நிலைமையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலைமைகள் சீராகும் வரை ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது. அதனால் ஐபிஎல் அணிகளும் ரசிகர்களும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.

- Advertisement -

மீண்டும் எப்போது:

இதைத் தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகளை இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்ததும் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஐபிஎல் முடிந்ததும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜூன் இருபதாம் தேதி துவங்கும் அந்தத் தொடர் ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025 எஞ்சிய போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? ரசிகர்கள் அச்சம்.. சேர்மன் பேட்டி

எனவே அந்த தொடர் முடிந்ததும் ஆகஸ்ட், செப்டம்பர் காலகட்டங்களில் எஞ்சியுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 58 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ளன. எனவே எஞ்சியுள்ள 16 போட்டிகளை ஆகஸ்ட், செப்டம்பர் காலகட்டங்களில் பிசிசிஐ நடத்தலாம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

Advertisement