ஐபிஎல் 2025 எஞ்சிய போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? ரசிகர்கள் அச்சம்.. சேர்மன் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மே மாதம் முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 57 போட்டிகள் முழுமையாக நடைபெற்று முடிந்த நிலையில் மே எட்டாம் தேதி தரம்சாலாவில் 58வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் டெல்லிக்கு எதிராக பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 10 ஓவரில் அதிரடியாக 122/1 ரன்கள் எடுத்தது போது திடீரென மைதானத்தில் வெளிச்சங்கள் நிறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் மைதானத்தில் மின்விளக்குகள் பிரச்சனையால் அந்த பாதிப்பு ஏற்பட்டதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் ஐபிஎல் சேர்மன் அர்ஜுன் துமால் உள்ளிட்ட நிர்வாகிகள் ரசிகர்களை மைதானத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

- Advertisement -

ஐபிஎல் நடைபெறுமா:

குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே 2 நாடுகளும் ராணுவம் ரீதியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அது போன்ற சூழ்நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் தரம்சாலா மைதானத்தில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு பிரகாச வாய்ப்புகள் இருக்கிறது.

அதனாலேயே அந்தப் போட்டியை பாதியில் நிறுத்திய பிசிசிஐ வீரர்கள் மற்றும் ரசிகர்களை பாதுகாப்பாக மைதானத்திலிருந்து வெளியேற்றியது. இந்த சூழ்நிலையில் எஞ்சிய 2025 ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்பது கேள்வியாக இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இந்நிலையில் அந்த செய்திகளை ஐபிஎல் சேர்மன் அர்ஜுன் துமால் உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

சிக்கல் தான்:

தற்சமயத்தில் நிலைமைகளை கவனித்து வருவதாக தெரிவிக்கும் அவர் இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் தற்போதைய சூழ்நிலைகளை ஆராய்ந்து வருகிறோம். தற்போது பதற்றமான சூழ்நிலைகள் இருக்கிறது. இதுவரை எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த வழி காட்டுதல்களும் வரவில்லை”

“ஐபிஎல் பங்குதாரர்களின் நலனை கருத்தில் வைத்து சிறந்த நல்ல முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறினார். இதற்கிடையே மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தரம்சாலாவில் நடைபெறுவதாக இருந்தது. அந்தப் போட்டியும் தற்போது பாதுகாப்பு காரணமாக தரம்சாலா மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பும்ராவுக்கு வாய்ப்பில்லை.. புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தான்.. இதுதான் காரணம் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

அந்தப் போட்டி அடுத்ததாக மே பதினொன்றாம் தேதி அகமதாத் நகரில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புவதாக செய்திகள் வெளி வருகின்றன. மொத்தத்தில் பதற்றமான சூழ்நிலையின் நிலவுவதால் 2025 ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement