- Advertisement -
ஐ.பி.எல்

தோனி எனக்கு இன்னொரு அப்பா மாதிரி.. மஹி பாய் ப்ளீஸ் எங்களுக்காக இதை செய்ங்க.. பதிரனா

ஐபிஎல் 2024 டி20 தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 10 போட்டிகளில் 5 வெற்றியும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் சென்னை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணிக்கு இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

ஜாம்பவான் மலிங்காவை போலவே ஸ்லிங்கா ஆக்சனை பயன்படுத்தி துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டுள்ள அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அப்பா மாதிரி:
அதனால் பொதுவாகவே யாரையும் சாதாரணமாக பாராட்டாத எம்எஸ் தோனி அவரை அடிக்கடி பாராட்டியிருந்தார். குறிப்பாக உலகக் கோப்பை போன்ற வெள்ளைப்பந்து தொடர்களில் மட்டும் பயன்படுத்தினால் பதிரான இலங்கை அணிக்கு சொத்தாக அமைவார் என்று தோனி பாராட்டினார். அத்துடன் சிஎஸ்கே அணியில் நான் உங்கள் மகனை பார்த்துக்கொள்கிறேன் என்று கடந்த வருடம் பதிரனா குடும்பத்திடம் தோனி தெரிவித்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் தோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பதிரனா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் தோனி கொடுக்கும் சிறிய ஆலோசனைகள் கூட பெரிய அளவில் அசத்துவதற்கு உதவுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார்”

- Advertisement -

“எப்போதும் என் மீது அறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன். களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார்”

இதையும் படிங்க: மும்பை அணிக்காக தீயாக வேலை செய்த அம்பயர்? நேரலையில் சிக்கியதால் ஆதாரத்துடன் விளாசும் ரசிகர்கள்

“சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும். மஹி பாய் முடிந்தால் இன்னும் ஒரு வருடம் எங்களுடன் ஐபிஎல் தொடரில் விளையாடுங்கள்” என்று கூறினார். இந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்தை விட்டு சரிந்துள்ள சிஎஸ்கே அணி அடுத்ததாக பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -