அரைசதம் அடித்ததை தனது மகளுக்காக அர்ப்பணித்த விராட் கோலி – முதன்முறையாக வெளியான வாமிகாவின் முகம்

Vamika
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 287 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து தற்போது விளையாடி வரும் இந்திய அணி 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேசிங் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் சேஸிங்கின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி ராகுல் ஆட்டமிழந்த பிறகு களம் புகுந்தார்.

தவானுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 84 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் அரைசதம் கடந்த விராட் கோலி கேலரியில் இருந்த தனது குழந்தைக்காக இந்த அரை சதத்தை அர்ப்பணித்தார். இதுவரை சமூகவலைதளத்திலோ அல்லது எந்தவிதமான ஊடகத்திலோ வெளிவராத அவரது குழந்தையின் முகத்தை இந்தப் போட்டியின் போது அவர்கள் வெளிக்காட்டினர்.

- Advertisement -

இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த வாமிகாவின் முகத்தினை கோலி தற்போது முதல் முறையாக வெளிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த வகையிலும் வெளிவராத வாமிகாவின் முகம் இந்த போட்டியின் மூலம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் இது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களது குழந்தைக்கு சுதந்திரம் தேவை என்பதனால் சமூக வலைதளத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட மாட்டோம் என்று கூறியிருந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஷஸ் தொடரை தொடர்ந்து மீண்டும் மோசமான நிலையை சந்தித்த இங்கிலாந்து – அடப்பாவமே

இப்படி ஒரு வேளையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் வாமிகா கேலரியில் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது மட்டுமின்றி படு டிரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement