சி.எஸ்.கே அணிக்கு இவரும் ஒரு முக்கியமான வீரர். கண்டிப்பா அவரையும் நாங்க வாங்குவோம் – காசி விஸ்வநாதன்

Kasi
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமும் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் தக்கவைப்பு பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

csk 1

- Advertisement -

அதில் முதல் வீரராக ஜடேஜாவையும், அதனைத்தொடர்ந்து தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய நால்வரையும் தக்க வைத்தது. இந்நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை சிஎஸ்கே அணி தேர்வு செய்யும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அந்த வகையில் சென்னை அணியின் சின்னத் தல சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி நிச்சயம் ஏலம் எடுக்கும் என்று கூறப்படும் வேளையில் தற்போது சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசி விசுவநாதன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

faf 1

சென்னை அணி மெகா ஏலத்தின் போது நிச்சயம் டூபிளெஸ்ஸிஸ்-யை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும் ஏனெனில் இரண்டு முறை சென்னை அணியை அவர் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி எப்போதுமே சென்னை அணிக்காக முக்கிய வீரராக அவர் இருந்து வந்துள்ளார். எனவே நிச்சயம் நாங்கள் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சிப்போம்.

- Advertisement -

இதையும் படிங்க : செஞ்சுரியா அடிச்சி தள்ளியவருக்கு இப்படி ஒரு சோதனையா? – மோசமான சாதனையில் இணைந்த விராட் கோலி

இருந்தாலும் ஏலத்தின் போது என்ன நடக்கும் என்பதை தற்போதே உறுதியாக கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். டூபிளெஸ்ஸிஸ் கடந்த சீசனில் சென்னை அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 45 ரன்கள் சராசரியுடன் 633 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement