எனக்கு ஐ.பி.எல் தொடரை விட எங்க நாட்டுக்காக விளையாடுறதுதான் முக்கியம் – அதிரடியாக வெளியேறிய நட்சத்திர வீரர்

Jhonny Bairstow vs RCB
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 31-ஆம் தேதி துவங்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முழுவதுமாக இந்த ஆண்டு இந்தியாவிலேயே நடைபெறவுள்ள இந்த தொடரில் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாடுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே பல வீரர்கள் காயம் காரணமாகவும், பல வீரர்கள் தனிப்பட்ட காரணமாகவும் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி வருவது தொடர்கதை ஆகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பலவீரர்கள் இந்த ஐபிஎல் தொடரை தவறவிட்ட வேளையில் தற்போது பஞ்சாப் அணியின் அதிரடி துவக்க வீரரும், இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனுமான ஜானி பேர்ஸ்டோ இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் தான் விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

அவர் இப்படி ஒரு முடிவை எடுக்க காரணம் யாதெனில் : ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆசஷ் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எனவே ஆசஷ் தொடரில் கவனம் செலுத்துவதற்காகவே பேர்ஸ்டோ இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Johnny Bairstow

ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் போது நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதன் காரணமாகவே அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இருந்து எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் பேர்ஸ்டோ காலில் பட்ட காயம் காரணமாக பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் கலந்து கொண்டு மீண்டும் காயமடைந்தால் ஆஷஸ் தொடரில் விளையாட முடியாது என்பதற்காக ஐபிஎல் தொடரை விட தனது நாட்டுக்காக ஆடுவதே முக்கியம் என்ற கருத்தினை அவர் வெளிப்படுத்தி இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : அம்பியாக தடுமாறும் அவரை இந்த சீசனில் அந்நியனாக பாக்க போறீங்க – இந்திய வீரருக்கு பாண்டிங் பயிற்சி

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தான் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்றும் கடைசி சில போட்டிகளை தவிர்த்து விட்டு ஆஷஸ் தொடருக்கான பயிற்சியை மேற்கொள்ள இருப்பதினால் பிளேஆப் சுற்றுக்கு முன்னதாகவே ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி நாடு திரும்ப விடுவேன் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement