காயம் காரணமாக தெ.ஆ டெஸ்ட் தொடரை தவறவிட்ட 3 நட்சத்திர வீரர்கள் – லிஸ்ட் இதோ (பி.சி.சி.ஐ)

IND-1
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தென்ஆப்பிரிக்க தொடருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எதிர்பார்த்தபடியே சில முக்கிய மாற்றங்களை பிசிசிஐ செய்துள்ளது.

- Advertisement -

அதன்படி புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் ரஹானேவின் துணை கேப்டன் பதவியை பறித்து ரோஹித் சர்மாவிடம் வழங்கியுள்ளனர். மேலும் மிடில் ஆர்டரில் சேர்க்கப்படாமல் இருந்த விஹாரியை அணியில் இணைத்துள்ளார்கள். அதேபோன்று ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலியின் தலைமையின் கீழ் 18 பேர் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய மூன்று நட்சத்திர வீரர்களுக்கு காயம் காரணமாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : Breaking News : தெ.ஆ தொடருக்கான ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் – பி.சி.சி.ஐ அதிரடி

அப்படி இந்த தென்னாப்பிரிக்க தொடரை தவறவிட்ட மூன்று நட்சத்திர வீரர்கள் யாரெனில் : துவக்க வீரர் சுப்மன் கில், ஆல் ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகிய மூவரும் காயம் காரணமாக இந்த தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெறவில்லை என பிசிசிஐ அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement