ஐபிஎல் மெகா ஏலம் 2022 : ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை வாங்க முடியும் (முழு விவரம்)

auction-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியல் பற்றிய அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அவர்களின் பெயரை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. அந்த வீரர்கள் போக இந்தியா மற்றும் உலக அளவில் இருந்து ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1214 வீரர்கள் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.

IPL
IPL Cup

இறுதிப்பட்டியல் :
இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து தணிக்கை செய்த ஐபிஎல் நிர்வாகம் அதிலிருந்து 590 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது. இதில் 228 வீரர்கள் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள் என்றும் 355 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடதவர்கள் என தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம் ஐசிசி துணை உறுப்பு நாடுகளில் இருந்து 7 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளது.

- Advertisement -

இதில் அதிகபட்ச அடிப்படை விலை தொகையான 2 கோடி ரூபாய்களுக்கு 48 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்ச அடிப்படை விலை தொகையான 1.5 கோடிகளுக்கு 20 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதேபோல் ரூபாய் 1 கோடி அடிப்படை விலையில் அதிகபட்சமாக 34 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

Auction

வீரர்கள் விவரம்:
இந்த 590 வீரர்களில் இந்தியாவிலிருந்து 370 வீரர்களும் வெளிநாடுகளிலிருந்து 270 வீரர்களும் பங்கேற்க உள்ளார்கள். வெளிநாடுகளில் இருந்து 47 ஆஸ்திரேலிய வீரர்கள், 34 வெஸ்ட்இண்டீஸ் வீரர்களும், 33 தென்ஆப்பிரிக்கா வீரர்களும், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா 24 வீரர்களும், இலங்கையில் இருந்து 23 வீரர்களும், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 17 வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

அதேபோல சிறிய நாடுகளான வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா 5 வீரர்களும், 3 நமிபியா வீரர்களும், 2 ஸ்காட்லாந்து வீரர்களும், அமெரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் இருந்து தலா 1 வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.

auction

மீதி தொகை, எத்தனை வீரர்கள்:
இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க ஒவ்வொரு அணிகளிடமும் எவ்வளவு தொகை மீதமுள்ளது மற்றும் எத்தனை வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. சென்னை சூப்பர் கிங்ஸ் : எம்எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னையிடம் 48 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 21 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்யலாம்.

CSk

2. டெல்லி கேபிட்டல்ஸ் : டெல்லி அணியிடம் மீதம் 47.5 கோடிகள் உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 21 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டவர்களையும் தேர்வு செய்ய முடியும்.

- Advertisement -

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கொல்கத்தாவிடம் 48 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணியால் 21 இந்தியர்களையும் 6 வெளிநாட்டவர்களையும் தேர்வு செய்யமுடியும்.

4. மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 48 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணியால் 21 இந்திய வீரர்களையும், 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.

5. சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் : ஹைதெராபாத் அணியிடம் 68 கோடிகள் உள்ளது. அந்த அணியால் 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டவர்களையும் தேர்வு செய்ய முடியும்.

rcbvsrr

6. ராஜஸ்தான் ராயல்ஸ் : ராஜஸ்தான் அணியிடம் 62 கோடிகள் மீதியுள்ளது. அந்த அணி 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்யலாம்.

7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : பெங்களூரு அணியிடம் 57 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணியால் 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.

8. பஞ்சாப் கிங்ஸ் : பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மற்ற அணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 72 கோடிகள் உள்ளது. அந்த அணியால் 23 இந்திய வீரர்களையும் 8 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.

9. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் : புதிய லக்னோ அணியிடம் 59 கோடிகள் மீதி உள்ளது. அந்த அணியால் 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டவர்களையும் தேர்வு செய்ய முடியும்.

இதையும் படிங்க : INDvsWI : 1000 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி சந்தித்துள்ள – மோசமான நிலை

10. அஹமதாபாத் : புதிய அஹமதாபாத் அணியிடம் 52 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணியால் 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.

Advertisement