இரண்டாவது ஒருநாள் போட்டியிலாவது பேட்டிங் தெரிஞ்ச அந்த பாஸ்ட் பவுலருக்கு வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் வேண்டுகோள்

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணியானது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க அங்கு சென்று விட்டதால் ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

INDvsRSA

- Advertisement -

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்த 250 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 240 ரன்கள் குவித்து ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் ஒன்பதாம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரை அணியில் சேர்க்க வேண்டும் என தற்போது இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Deepak Chahar

ஏனெனில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் பின்வரிசையில் ஷர்துல் தாகூர் மிகச் சிறப்பாக அடித்து விளையாடினார். அவர் ஆட்டம் இழந்ததும் அடுத்து வந்த பவுலர்கள் சஞ்சு சாம்சனுக்கு கை கொடுக்காததால் இந்திய அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.

- Advertisement -

ஆனால் ஏற்கனவே பலமுறை தனது பேட்டிங் திறமையை நிரூபித்திருக்கும் தீபக் சாகர் மட்டும் முதல் போட்டியில் இருந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்திய அணி செய்யும் இந்த விஷயத்தை பாத்தா ஆச்சரியமா இருக்கு. செம ஸ்ட்ராங் தான் – கம்ரான் அக்மல் பாராட்டு

அதோடு நன்கு பேட்டிங் ஆடத் தெரிந்த அவர் இருந்தால் இன்னும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பலப்படும் என்பதனால் தீபக் சாகர் அடுத்த இரண்டாவது போட்டியில் விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கையை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement