இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டியில் கடுமையாக போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஜனவரி 21ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் பவுலிங்க்கு சாதகமாக இருந்த மைதானத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் ஓவரிலிருந்தே இந்தியாவின் தரமான பந்து வீச்சிற்கு பதில் சொல்ல முடியாமல் ஃபின் ஆலன் 0, டேவோன் கான்வே 7, ஹென்றி நிக்கோலஸ் 2, டார்ல் மிட்சேல் 1, கேப்டன் டாம் லாதம் 1 என முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை ஒற்றை இலக்க ரன்களில் இழந்தது. அதனால் 15/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணி 50 ரன்களை தாண்டுமா என அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்த போது நல்ல வேலையாக முதல் போட்டியின் நாயகன் மைக்கேல் பிரேஸ்வெல் 22, கிளன் பிலிப்ஸ் 36, மிட்சேல் சாட்னர் 27 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு கணிசமான ரன்களை சேர்த்தனர்.
சூப்பர் சாதனை:
இருப்பினும்
