TNPL : முதல் வீரராக ஏலத்தில் வாங்கப்பட்ட விஜய் ஷங்கர். எத்தனை இலட்சம்? – எந்த அணிக்கு தெரியுமா?

- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போன்றே தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளூர் வீரர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் டி.என்.பி.எல் போட்டிகள் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான டி.என்.பி.எல் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள வேளையில் அந்த தொடருக்கான வீரர்களின் ஏலமானது இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது.

TNPL

- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த சர்வதேச வீரர்களும், உள்ளூர் வீரர்களும் இணைந்து விளையாடும் இந்த தொடரானது தமிழக ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரபலமான தொடராக பார்க்கப்பட்டு வரும் வேலையில் இந்த ஆண்டும் டி.என்.பி.எல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்பது உறுதி.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி.என்.பி.எல் சீசனுக்கான வீரர்களின் ஏலமானது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டிஎன்பிஎல் ஏலத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பேந்தர்ஸ் என எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.

Vijay-Shankar

இந்த ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தலா இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என்று கூறப்பட்டதால் மற்ற வீரர்கள் அனைவருமே இந்த ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். வீரர்கள் மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் வீரர்களின் அடிப்படை விலை 10 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று பி பிரிவு வீரர்களுக்கு அடிப்படை விலை 6 லட்ச ரூபாயாகவும், சி பிரிவு வீரர்களுக்கு விலை 3 லட்ச ரூபாயும், டி பிரிவு வீரர்களுக்கு 1.5 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளுக்கும் தலா 70 லட்சம் வரை செலவுசெய்துகொள்ளலாம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகவே அனைத்து அணிகளும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : IPL 2023 : சன் ரைசர்ஸ் அணிக்கு வெளிநாட்டு வீரரை கேப்டனாக அறிவித்த நிர்வாகம் – கப்புக்கு பிளான் பண்ணிட்டாங்க

இந்நிலையில் இன்றும் மதியம் 12 மணிக்கு துவங்கிய இந்த டி.என்.பி.எல் ஏலத்தில் முதலில் ஏ பிரிவு வீரர்களின் ஏலம் நடைபெற்றது. அதில் முதல் வீரராக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை திருப்பூர் தமிழன்ஸ் அணி 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement