விராட் கோலி விடயத்தில் நிர்வாகம் எடுத்த இந்த முடிவு ரொம்ப தப்பு – திலீப் வெங்சர்க்கார் ஓபன்டாக்

Vengsarkar-and-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் தற்போது அதிக அளவில் விமர்சிக்கப்படும் வரும் ஒரு விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்த விராட் கோலி அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் திணறி வருகிறார். அது மட்டும் இன்றி நடைபெற்ற முடிந்த இங்கிலாந்து தொடர் அவருக்கு மறக்கக் கூடிய ஒரு தொடராக மாறியுள்ளது.

Kohli

- Advertisement -

இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த தொடர் முடிந்ததும் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மீண்டும் ஆசிய கோப்பையின் போது அணிக்கு திரும்பவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விராட் கோலியின் மீது ஏற்பட்டிருக்கும் இந்த விமர்சனம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் நிர்வாகத்தின் இந்த முடிவை தவறான முடிவு என்று சொல்லி இந்திய அணியின் முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் தேர்வு குழுவினர் ஏன் விராட் கோலியை இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக தேர்வு செய்யவில்லை என்பது எனக்கு புரியவில்லை.

Virat-Kohli

ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா மண்ணில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால் கோலி போன்ற முக்கியமான வீரர்கள் எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியம். எந்த அளவிற்கு அதிக போட்டிகளில் அவர்களைப்போன்ற வீரர்கள் விளையாடுகிறார்களோ அந்த அளவிற்கு அவருக்கு தன்னம்பிக்கையும், பார்மும் திரும்ப கிடைக்கும்.

- Advertisement -

எனவே என்னை பொறுத்தவரை விராட் கோலி தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவரை இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட விளையாட வைக்காதது இந்திய நிர்வாகத்தினர் எடுத்த தவறான முடிவு என்று தான் கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : எப்போதுமே ஒரு வீரர் தொடர்ச்சியாக ரன்களை குவிக்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதிக போட்டிகளை வழங்க வேண்டும்.

இதையும் படிங்க : IND vs WI : கபில் தேவ் மற்றும் வால்ஸ் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரவீந்திர ஜடேஜா

ஏனெனில் அதிக போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் மைதானத்தில் நின்று விளையாட முயற்சிப்பார்கள். மீண்டும் அவர்களுக்கு ரன் குவிக்க வாய்ப்பு கிடைக்கும் அதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையும் திரும்ப கிடைக்கும் என்று திலீப் வெங்சர்க்கார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement