யாரை விட்டாலும் உங்களை விடமாட்டோம். சீனியர் வீரரை அணியில் எடுக்கவிருக்கும் சி.எஸ்.கே – மாஸ் பிளான்

Csk
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணியானது 4-வது முறையாக கைப்பற்றி அசத்தியது. அதை தொடர்ந்து இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் துவங்க இருக்கும் 15-வது ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலில் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

csk 1

- Advertisement -

மேலும் வெகு விரைவில் மெகா ஏலமும் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ய காத்திருக்கின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியும் இந்த ஏலத்தில் ஒரு சில வீரர்களை தேர்ந்தெடுக்க குறி வைத்துள்ளது. அந்த பட்டியலில் சென்னை அணியின் அனுபவ வீரரான அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ராயுடு மிடில் ஓவர்களில் விக்கெட் விழுந்தாலும் அதிரடியாக விளையாடி அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியவர். இதன் காரணமாக அம்பத்தி ராயுடுவை அணியில் எடுக்க சிஎஸ்கே விவாகம் ஆர்வம் காட்டுகிறது.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ராயுடு பதிலளிக்கையில் : நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதில் விருப்பமாக இருக்கிறேன். என்னை அவர்கள் ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் நிச்சயம் நான் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன். அவர்களும் என்னை ஏலத்தில் எடுக்க நினைப்பதாக கேள்விப்படுவது மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 3 விக்கெட் மட்டுமே இழந்து வலுவாக இருந்த அணி 1 மணி நேரத்திலேயே ஆல் அவுட்டாக – என்ன காரணம்?

அவரைத் தவிர்த்து இன்னும் சில இளம் வீரர்களையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இம்முறை சிஎஸ்கே அனுபவம் மற்றும் இளமை ஆகியவற்றை கலந்த ஒரு அணியாக உருவாக்கப்படும் என்று தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement