வருஷம் தவறாம சி.எஸ்.கே அணி எடுத்தாலும் ஒரே போட்டியில் கூட விளையாடாத இளம்வீரர் – பாவங்க அவரு

CSk
- Advertisement -

பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக பெங்களூருவில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். அதிலும் குறிப்பாக சென்னை அணி தேர்ந்தெடுக்கும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகமாகவே காணப்பட்டது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கிய அணியாக பார்க்கப்படும் சென்னை அணியானது இதுவரை நான்கு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

CSK-Auction

- Advertisement -

தோனி நமது அணிக்கு தலைமை வகிப்பதாலும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற அணியாக சென்னை அணியை திகழ்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை சிஎஸ்கே தேர்ந்தெடுக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே இருந்த நிலையில் நேற்று முழு வீரர்களும் எடுக்கப்பட்டு தற்போது சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களின் பட்டியலும் முழுவதுமாக வெளியாகி உள்ளது.

இந்த சிஎஸ்கே அணியில் சில வீரர்கள் கோடிக்கணக்கில் வாங்கப்பட்டாலும் பல இளம் வீரர்கள் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டனர். ஆனாலும் அப்படி தேர்வு செய்த அனைவருமே திறமைசாலிகள் என்பதால் அவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nishanth

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் கடந்த சில சீசன்களாகவே இடம் பிடித்து வந்த தமிழக வீரர் ஹரி நிஷாந்த் மீண்டும் இம்முறையும் சென்னை அணியில் விளையாட தேர்வாகியுள்ளார். முதல் சுற்றில் விலைபோகாத அவர் இரண்டாவது சுற்றின் போது மீண்டும் 20 லட்ச ரூபாய் என்ற அடிப்படையில் சென்னை அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று மற்றுமொரு தமிழக வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்குமே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டால் அது சந்தேகம்தான். அதிலும் குறிப்பாக ஹரி நிஷாந்தின் நிலைமை மிகவும் பாவம் என்று கூறலாம். ஏனெனில் கடந்த சில சீசன்களாக அவர் சென்னை அணியில் இருந்தாலும் வெளியிலேயே அமர வைக்கப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : அவங்க 2 பேர் சொல்லித்தான் சி.எஸ்.கே ஏலத்துல வீரர்களை வாங்குனாங்களாம் – வெளியான தகவல்

ஜெகதீசன் கூட ஒரு சில போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இதுவரை ஹரி நிஷாந்த் ஒரு போட்டியில் கூட சென்னை அணிக்காக விளையாடியதில்லை. இதன் காரணமாக அவர் வேறு ஏதாவது அணிக்கு சென்று இருந்தால் கூட விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று ரசிகர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement