இதான் டி20யின் அழகே.. அவர மாதிரி பிளேயர்ஸ் வருவது இந்தியாவுக்கு நல்லது.. புவனேஸ்வர் குமார் பேட்டி

Bhuvneshwar Kumar
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற 23வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தியது. முல்லான்பூர் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 64 (37) ரன்கள் எடுக்க பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் விக்கெட்டுகள் எடுத்தார்.

பின்னர் சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 14, ஜானி பேர்ஸ்டோ 0, பிரப்சிம்ரன் சிங் 4, சாம் கரண் 29, சிக்கந்தர் ராசா 17, ஜிதேஷ் சர்மா 19 என முக்கிய வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் பஞ்சாப் வெற்றி கேள்விக்குறியான போது கடைசி நேரத்தில் சசாங் சிங் அதிரடியாக 46* (25), அசுடோஸ் சர்மா 33* (15) ரன்கள் எடுத்து போராடினர்.

- Advertisement -

டி20யின் அழகு:
குறிப்பாக உனட்கட் வீசிய கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட போது இந்த ஜோடி 26 ரன்கள் எடுத்தது. இருப்பினும் 20 ஓவரில் பஞ்சாப்பை 180/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இப்போட்டியில் தவானை ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டாக்கி ஆச்சரியத்தை கொடுத்த அவர் தொடர்ந்து பயிற்சிகள் செய்து வருவதால் அசத்த முடிவதாக கூறியுள்ளார்.

அத்துடன் வெறும் 20 வயதில் 64 ரன்கள் அடித்து 1 விக்கெட் 1 கேட்ச் பிடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற நித்திஷ் ரெட்டி போன்ற வீரர்கள் வருவது இந்தியாவுக்கு நல்லது என்றும் புவனேஸ்வர் குமார் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது தான் டி20 கிரிக்கெட்டின் அழகாகும். பிட்ச் கடைசி 2 ஓவரில் பேட்டிங்க்கு அதிக சாதகமாக மாறியது”

- Advertisement -

“அதனால் நகத்தை கடிக்கும் அளவுக்கு சென்ற இந்தப் போட்டியில் வென்றது நல்லது. தவான் இறங்கி வர முயற்சித்ததால் நான் க்ளாஸினை முன்னோக்கி வந்து நிற்க சொன்னேன். கடைசியாக புனே அணிக்காக விளையாடிய போது ஸ்டம்பிங் முறையில் விக்கெட் எடுத்தேன் என்று நினைக்கிறேன். இவை அனைத்தும் நீங்கள் அதே விஷயங்களை எப்படி எளிமையாக பின்பற்றி தயாராகிறீர்கள் என்பதை பொறுத்ததாகும்”

இதையும் படிங்க: பஞ்சாப் பவுலர்களை ஒன்னும் செய்ய முடியல.. அவங்கள மட்டும் பிளான் பண்ணி அடிச்சேன்.. நித்திஷ் பேட்டி

“அனைவருக்கும் நான் என்ன செய்வேன் என்பது தெரியும். எனக்கு பேட்ஸ்மேன்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியும். கடந்த போட்டியிலும் நித்திஷ் ரெட்டி எப்படி பேட்டிங் செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அவரைப் போன்ற இளம் திறமை வருவது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும்” என்று கூறினார்.

Advertisement