தோனியை நேரில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கி ஐ.பி.எல் ஏலத்தில் கலந்துகொள்ளும் இந்த வீரர் – யார் தெரியுமா?

Dorji-3
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் மெகா அளவில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தை நடத்துவதற்காக அனைத்து விதமான வேலைகளிலும் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 1214 வீரர்கள் போட்டிபோட உள்ளார்கள். இம்முறை மெகா அளவில் இந்த ஏலம் நடைபெற உள்ளதால் இந்த ஏலத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

Auction

- Advertisement -

கால்பதிக்கும் பூடான் வீரர் :
இந்த ஏலத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த 318 வீரர்கள் களமிறங்க உள்ளார்கள். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து 59 வீரர்கள் போட்டி போட உள்ளார்கள். அதேபோல் ஸ்காட்லாந்து போன்ற சிறிய நாடுகளில் இருந்தும் இந்த ஏலத்தில் பங்கேற்க ஒரு சில வீரர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.

அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் நாட்டிலிருந்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விண்ணப்பம் செய்துள்ளார். பூட்டான் நாட்டிலுருந்து “மிக்யோ டோர்ஜி” எனும் 22 வயது நிரம்பிய இவர் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளார்.

dorji

தோனியின் உத்வேகம்:
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் விண்ணப்பம் செய்ய இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் எம் எஸ் தோனி அளித்த உற்சாகமே காரணமென மிக்யோ டார்ஜி உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தோனி அவருக்கு ஒரு சில ஆலோசனைகளை வழங்குவதுடன் இறுதியில் அவரின் பூடான் நாட்டு கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் கையொப்பமிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வீடியோவை பதிவிட்டுள்ள மிக்யோ டார்ஜி அதில், “எளிமையை கடைபிடி. எப்போதும் முடிவில் குறைவான கவனத்தையும் செயல்பாட்டில் அதிக கவனத்தையும் செலுத்து. உனது செயல்பாட்டை நீ சரியாக செய்தால் முடிவு தாமாகவே சரியாக கிடைக்கும். மேலும் அழுத்தத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இரு – இப்படியான மிகச்சிறந்த ஆலோசனையை மகத்தான எம்எஸ் தோனி வழங்கியது எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது” என பதிவிட்டுள்ளார்.

dorji 1

வாய்ப்பு கிடைக்குமா :
பூட்டான் நாட்டில் கிரிக்கெட் என்பது மிகவும் பிரபலம் அடையாத ஒரு விளையாட்டாகும். சொல்லப்போனால் கடந்த 2019ஆம் ஆண்டு தான் பூட்டான் அணி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒரு துணை உறுப்பு நாடாக சேர்த்து கொள்ளப்பட்டது.

- Advertisement -

பூட்டான் அணிக்காக மிக்யோ டார்ஜி இதற்கு முன் நேபால் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் கடந்த வருடம் அந்நாட்டில் நடந்த எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் சாகித் அப்ரிடி போன்ற தரமான கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : அவரே ஆசைப்பட்டாலும் அதெல்லாம் வேலைக்காகாது. பும்ராவின் ஆசை நிறைவேறாது – பரத் அருண் பேட்டி

ஐபிஎல் தொடரில் கால் பதித்துள்ளது பற்றி அவர், “ஐபிஎல்லில் விளையாடுவது என்பது எனக்கு மிகப்பெரிய கனவு. பூடானில் இருந்து ஏலப்பட்டியலில் ஒரு வீரர் இருப்பதை பார்த்ததும் என் நண்பர்கள் என்னை போனில் அழைக்க தொடங்கினர். ஆனால் இது ஆரம்பச் சுற்று என்பது அவர்களுக்குத் தெரியாது. பெயர்கள் மேலும் பட்டியலிடப்படும். சொல்லவேண்டுமெனில் மெயின் லிஸ்ட்டில் என் பெயர் இருக்காது என நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் பூட்டானில் இருந்து ஒருவர் பதிவு செய்வது ஒரு பெரிய விஷயம்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Advertisement