- Advertisement -
ஐ.பி.எல்

ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சி.எஸ்.கே அணியின் கேப்டனாக அவரை மாற்றுங்க – பத்ரிநாத் கருத்து

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அவர்கள் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள முதல் 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கின்றனர்.

கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட்டை மாத்துங்க :

இதன் காரணமாக இனிவரும் போட்டிகள் சி.எஸ்.கே அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இனிவரும் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதால் இனிவரும் போட்டிகளில் சி.எஸ்.கே அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த சீசனில் சி.எஸ்.கே அணியின் தடுமாற்றத்திற்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படும் கேப்டன் ருதுராஜை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் சி.எஸ்.கே வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி அந்த பொறுப்பை சஞ்சு சாம்சனுக்கு ஒப்படைப்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் யோசித்தால் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் தற்போது கேப்டன்சி பொறுப்பினால் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் பாதிப்பை சந்தித்து வருகிறார். அவரது முகத்திலேயே மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் கிரீஸில் இருக்கும் வரை எதிரில் இருக்கும் அவர்களை சும்மா விடமாட்டேன் – வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

எனவே கேப்டன்சியை சஞ்சு சாம்சனிடம் கொடுத்து அவரது அழுத்தத்தை குறைக்க வேண்டும். பிறகு அவர் ஒரு பேட்ஸ்மேனாக விளையாடி ரன் குவிக்க துவங்கி விட்டால் பிரச்சினைகள் தீரும். இதன் காரணமாகவே சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கி சஞ்சு சாம்சனை கொண்டுவர நிர்வாகம் யோசிக்க வேண்டும் என சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -