வீடியோ : யார்க்கர் பந்தால் விக்கெட் எடுத்த அர்ஜுனை – ஒரே ஓவரில் ஜோடியாக அடித்து நொறுக்கிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்

PBKS vs MI Arjun tendulkar
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 31வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் நடத்தின. அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மேத்தியூ ஷார்ட் தடுமாற்றமாக செயல்பட்டு 11 (10) ரன்களில் அவுட்டானலும் மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 26 (17) ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த போது அர்ஜுன் டெண்டுல்கரின் துல்லியமான யார்க்கர் பந்தல் அவுட்டாக்கினார்.

அந்த நிலைமையில் அடுத்ததாக களமிறங்கி அதிரடி காட்டிய அதர்வா டைட் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 (17) ரன்களிலும் லியாம் லிவிங்ஸ்டன் 10 (12) ரன்களிலும் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கினார்கள். அதனால் 83/4 என தடுமாறிய பஞ்சாப்பை அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சாம் கரண் – ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினார்கள். இருப்பினும் மும்பை பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்ததால் யாரை அடிக்கலாம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த ஜோடி 16வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கரை குறி வைத்தனர்.

- Advertisement -

சரமாரியான அடி:
ஏனெனில் அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரண் சிக்ஸர் பறக்க விட்டதால் தடுமாறிய அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்ததாக ஒய்ட் வீசினார். அதற்காக மீண்டும் வீசப்பட்ட பந்தில் பவுண்டரி அடித்த சாம் கரண் 3வது பந்தில் சிங்கிள் எடுக்க 4வது பந்தை எதிர்கொண்ட ஹர்ப்ரீத் சிங் தனது பங்கிற்கு பவுண்டரியையும் 5வது பந்தில் சிக்ஸரையும் பறக்க விட்டார். அதனால் அழுத்தத்தில் அடுத்ததாக அர்ஜுன் வீசிய நோபால் பந்திலும் பவுண்டரி அடித்த அவர் ஃபிரீ ஹிட்டில் மீண்டும் பவுண்டரி அடித்தார்.

அந்த வகையில் அந்த முதல் 2 ஓவரில் 11 ரன்களை மட்டுமே கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் 3வது ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கி 1 விக்கெட் எடுத்தாலும் 48 ரன்களை கொடுத்ததால் ரோகித் சர்மா கடைசி ஓவரை கொடுக்கவில்லை. அப்படி அந்த ஒரு ஓவரை பயன்படுத்தி பெரிய திருப்பு முனையை உண்டாக்கி 5வது விக்கெட் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப்பை மீட்டெடுத்த அந்த ஜோடியில் ஹர்ப்ரீத் சிங் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41 (28) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலே மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் சாம் கரண் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 55 (29) ரன்களை விளாசி தனது அணியை காப்பாற்றி அவுட்டானார்.

- Advertisement -

இறுதியில் வெறும் 7 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்க விட்ட ஜிகே சர்மா அதிரடியாக 25 ரன்களை எடுத்ததால் 20 ஓவர்களில் பஞ்சாப் 214/8 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த போட்டியில் உண்மையாகவே முதல் 10 ஓவரில் 83/4 என பஞ்சாப் தடுமாறிய போது அர்ஜுன் டெண்டுல்கர் 31 ரன்கள் வாரி வழங்கிய அந்த ஓவர் தான் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: IPL 2023 : என்னைக்குமே சச்சின் அளவுக்கு வரமுடியாது – அர்ஜுன் பற்றி ஆரம்பத்திலேயே வாயை விட்டு விமர்சித்த முன்னாள் பாக் வீரர்

ஏனெனில் அதன் பின் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடித்த பஞ்சாப் வெற்றிக்கு போராடும் அளவுக்கு பெரிய ஸ்கோரை குவித்து அசத்தியுள்ளது. முன்னதாக இந்த வருடம் அறிமுகமாகி இளம் வீரராக இருக்கும் அர்ஜுன் குறைந்த வேகத்தில் வீசியதால் நிச்சயமாக அடி வாங்குவார் என்று ரசிகர்கள் ஏற்கனவே தெரிவித்தனர். அதே போல இந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய அவர் விரைவில் நல்ல முன்னேற்றத்தை கண்டால் மட்டுமே நீடித்து விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement