ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இந்திய வீரரான இவர் 20 கோடிக்கு ஏலம் போவார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டிற்கான 15-வது ஐபிஎல் சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் துபாயில் நடைபெற்ற ஏலத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிய அணிகளாக அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இணைந்து அடுத்த ஆண்டு 10 அணிகள் விளையாடும். இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் மீதமுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொரு அணிக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் 20 கோடிக்கு ஏலம் போகக்கூடிய இந்திய வீரர் குறித்து தற்போது ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியின்போது அதிரடியாக விளையாடிய இந்திய வீரரான கேஎல் ராகுல் வரவிருக்கும் தொடரில் 20 கோடி ரூபாய் வரை செல்வார் என்று அவர் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ராகுல் 49 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார். இந்நிலையில் ராகுல் குறித்து அவர் பதிவிடுகையில் : என்னை பொறுத்தவரை இந்த ஐபிஎல் ஏலத்தில் ராகுல் 20 கோடி ரூபாய் வரை செல்வார். ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைமதிப்பு மிக்க வீரராக அவர் மாற வாய்ப்புள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 1436 கிலோமீட்டர் நடந்து பார்க்க வந்த ரசிகர். இன்பப்பரிசு தந்து மகிழ்வித்த தல தோனி – என்ன செய்தார் தெரியுமா?

நடைபெற்று முடிந்துள்ள 2வது டி20 போட்டியில் அவர் 65 ரன்கள் குவித்து மட்டுமன்றி முதல் விக்கெட்டிற்கு ரோஹித்துடன் 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ராகுலுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement