அதை விட யாரையும் பெருசா காதலிக்கல.. இந்தியாவுக்காக 12 வருட உழைப்பு புல்லரிக்க வெச்சுடுச்சு.. மந்தனா பேட்டி

Smriti Mandhana
- Advertisement -

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருத்தி மந்தனா சமீபத்தில் திடீரென தமது திருமணம் கைவிடப்படுவதாக அறிவித்தார். மகளிர் கிரிக்கெட்டில் ஏராளமான ரன்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளை பங்காற்றியுள்ளார். சமீப காலங்களில் பாலஸ் முச்சல் என்ற இசையமைப்பாளரை காதலித்து வந்த அவர் இந்தியா 2025 உலகக் கோப்பையை வென்ற கையோடு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

ஆனால் திடீரென தமது திருமணம் கைவிடப்படுவதாக அறிவித்த மந்தனா அது சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் நீக்கினார். இருப்பினும் அதற்கான உண்மையான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. ஆனால் அவருடைய தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதாலேயே திருமணம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

உண்மையான காதல்:

அதே போல முச்சல் உண்மையாக இல்லாததால் மந்தனா திருமணத்தை நிறுத்தியதாகவும் வதந்தியாக சில செய்திகள் வெளி வந்தன. இந்நிலையில் திருமணம் கைவிடப்பட்ட பின் முதல் முறையாக மந்தனா தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது திருமணம் கைவிடப்பட்டதால் ஏற்பட்ட சோகத்தை எப்படி கடந்து வந்தீர்கள் என்று அவரிடம் தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு இந்திய கிரிக்கெட்டை விட தாம் எதையும் அதிகம் காதலிக்கவில்லை என்று மந்தனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டை விட நான் எதையும் அதிகமாக காதலித்தேன் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்திய அணியின் ஜெர்சியை அணிவது எங்களை வழி நடத்துகிறது. அதற்காக நீங்கள் அனைத்து பிரச்சினைகளையும் ஒதுக்கி வைக்கலாம் என்ற ஒரு எண்ணமே உங்களை உங்களுடைய வாழ்வில் கவனம் செலுத்த உதவும்”

- Advertisement -

புல்லரித்த வெற்றி:

“கடந்த பல வருடங்களாக போராடிய எங்களுக்கு 2025 உலகக்கோப்பை வெற்றி பரிசாக கிடைத்தது. நாங்கள் அதற்காக 12 வருடங்களுக்கு மேல் விளையாடி உழைத்து ஆவலுடன் காத்திருந்தோம். பல தருணங்களில் அந்த வெற்றி எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. நாங்கள் காட்சிப்படுத்திய வெற்றியைக் கடைசியாக நேரில் பார்த்தது புல்லரிக்க வைத்தது. நாங்கள் மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி ஆகியோருக்காகவும் உலகக் கோப்பையை வெல்ல விரும்பினோம்”

இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவிடம் தொடர்ந்து பிரையன் லாரா இதை சொல்லிகிட்டே இருக்காரு – அபிஷேக்கின் தந்தை அளித்த பேட்டி

“அவர்களுடைய கண்ணில் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்ததே மகளிர் கிரிக்கெட் வென்றதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது. அது அவர்கள் அனைவருக்குமான வெற்றியாகும். என்னிடம் குழந்தையிலிருந்தே பேட்டிங் செய்வதற்கான வெறித்தனம் இருந்தது. மனதில் என்னை உலகச் சாம்பியன் என்று அழைப்பதை விரும்பினேன். நீங்கள் கிரிக்கெட்டில் சதமடித்தாலும் அடுத்தப் போட்டியில் சுழியத்தில் இருந்தே துவங்குவீர்கள். நீங்கள் உங்களுக்காக மட்டுமின்றி அணிக்காக விளையாடுவீர்கள்” என்று கூறினார்.

Advertisement