நம்ப வைத்து ஏமாற்றிய ஆர்.சி.பி அணியின் நிர்வாகம். வெளிப்படையாக வருத்தத்தை பகிர்ந்த – யுஸ்வேந்திர சாஹல்

Yuzvendra-Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 72 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 121 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோன்று 75 ஒரு டி20 போட்டிகளில் பங்கேற்று 91 விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் தற்போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

Chahal

- Advertisement -

2022-ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் அந்த ஆண்டு 27 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்த வீரராக பர்பிள் தொப்பியை வென்றிருந்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு அண்மையில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரிலும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இந்நிலையில் பெங்களூர் அணிக்காக தான் 8 ஆண்டுகளாக விளையாடியும் அவர்கள் என்னை தேர்வு செய்யாதது மிகவும் வருத்தமாக இருந்தது என தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : பெங்களூரு அணி என்னை வாங்காததில் நிச்சயமாக நான் வருத்தப்பட்டேன். எனது பயணம் ஆர்.சி.பி-யுடன் துவங்கிய பிறகு 8 ஆண்டுகள் நான் ஒரு குடும்பமாகவே அந்த அணியை நினைத்து விளையாடினேன்.

Chahal 1

அதேபோன்று ஆர்சிபி-யில் விளையாட ஆரம்பித்ததும் எனக்கு இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியில் இருந்தே விராட் கோலி என் மீது நம்பிக்கை வைத்தார். அதே போன்று 2022-ஆம் ஆண்டு ஏலத்தில் என்னை நிச்சயம் வாங்குவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதிக பணம் கேட்டதாலேயே வாங்கவில்லை என்ற கருத்து வெளிவந்தது.

- Advertisement -

ஆனால் நான் அதிக பணம் அவர்களிடம் கேட்கவில்லை. அதோடு ஏலத்தில் நடைபெறவிருந்த தேர்வு குறித்து நிர்வாகத்திடம் இருந்து எனக்கு எந்த ஒரு போன் காலும் வரவில்லை. அது எனக்கு மிகவும் மோசமான ஒன்றாக தோன்றியது. நான் அவர்களுக்காக 8 ஆண்டுகள் 140 போட்டிகள் வரை விளையாடியுள்ளேன். எவ்வளவு விலை போனாலும் என்னை எடுப்பேன் என்று கூறியிருந்தார்கள்.

இதையும் படிங்க : IND vs WI : 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நிகழவுள்ள 2 மாற்றங்கள் – ரோஹித் சர்மா சொன்னதை கவனிச்சீங்களா?

ஆனால் அது அப்படி நடக்கவில்லை. நான் ஏலத்துக்கு பிறகு ஆர்.சி.பி அணியின் நிர்வாகத்தின் மீது மிகவும் கோபமடைந்தேன். 8 ஆண்டுகள் நான் பெங்களூரு அணிக்காக கடினமான உழைப்பை வெளிப்படுத்தி உள்ளேன். பெங்களூரு மைதானம் எனக்கு மிகவும் பிடித்த மைதானம். பெங்களூர் அணியின் ரசிகர்களை இன்றளவும் நான் விரும்பி வருகிறேன் என்று ஆர்.சி.பி அணியின் மீதான அதிருப்தியை சாஹல் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement