100+ மீட்டர் சிக்ஸ் அடிச்சா 8 ரன் தரனும் ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள் – சாஹல் கொடுத்த சரியான நோஸ்கட்

Chahal
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் நல்ல வரவேற்பினை பெற்று உச்சத்தில் இருந்த போது இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் டி20 தொடரானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை தலைமையாகக் கொண்டு பல அணிகளாக பிரிக்கப்பட்டு அதில் உள்ளூர் வீரர்களையும் இணைத்து தரமான பொழுதுபோக்கை இந்த போட்டிகளின் மூலம் ஐபிஎல் வழங்கி வந்தது.

அப்படி அன்று தொடங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது 14 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 15 வது சீசனில் அடி எடுத்து வைத்து அற்புதமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் அவ்வப்போது சில விதிமுறைகள் மாறி வருகிறது.

- Advertisement -

அதன்படி இந்த ஆண்டும் குறிப்பிட்ட சில விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் வழங்கி அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்ற வேளையில் பஞ்சாப் வீரர் லியாம் லிவிங்ஸ்டன் அடித்த 5 சிக்ஸர்களில் ஒன்று 100 மீட்டருக்கு மேல் சென்று அதாவது 108 மீட்டர் வரை சென்று விழுந்தது.

இந்த சீசனில் தற்போது வரை மிகப்பெரிய சிக்ஸராக பார்க்கப்படும் இந்த சிக்சர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒரு ட்வீட் ஒன்றினை வெளியிட்டிருந்தார். எப்போதுமே கிரிக்கெட் குறித்து பல்வேறு ட்வீட்களை வெளியிடும் அவர் அதே போன்று இந்த விடயத்திலும் : 100 மீட்டருக்கு மேல் அடிக்கப்படும் சிக்சர்களுக்கு 8 ரன் வழங்க வேண்டும் என தனது வேண்டுகோளை சமூக வலைதளம் மூலமாக முன்வைத்தார்.

- Advertisement -

ஏனெனில் பேட்ஸ்மேன்கள் நூறு மீட்டர்களுக்கு மேல் சிக்ஸ் அடிக்கும்போது 8 ரன் கிடைக்கும் என்பதால் அடிக்கடி சிக்ஸ் அடிக்க முயற்சி செய்வார்கள் என்றும் அதனால் போட்டி சுவாரஸ்யம் அடையும் என்று நினைத்து அவர் இதை பதிவு செய்தார். ஆனால் அவரின் இந்த கருத்துக்கு நோஸ்கட் கொடுக்கும் விதமாக ராஜஸ்தான் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான சாஹல் ரிப்ளை அளிக்கையில் :

இதையும் படிங்க : இன்னும் எத்தனை மேட்ச் தோத்தாலும் அவரை டீமை விட்டு தூக்க மாட்டோம் – ஜடேஜா அளித்த வாக்குறுதி

அப்படி என்றால் 3 டாட் பாலை தொடர்ந்து எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் அவுட் என்று அறிவிக்க வேண்டும் என சரியான நோஸ்கட் கொடுத்தார். என்னதான் இவர்கள் இருவரும் மாறி மாறி இப்படி ஒரு விதிமுறை பற்றி பேசிக் கொண்டாலும் நடைமுறைக்கு இதெல்லாம் சாத்தியம் இல்லை என்பதனால் எந்த ஒரு விதிமுறையை எடுக்கும்போதும் ஐபிஎல் நிர்வாகம் யோசித்து தான் எடுக்கும் என்பதே வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement