இது குஜராத் கிடையாது.. பாண்டியாவுக்காக ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை பற்றி யுவராஜ் சிங்

Yuvraj Singh
- Advertisement -

மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் இம்முறை வெற்றிகரமான அணியாக திகழும் ரொம்ப இந்தியன்ஸ் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இத்தனைக்கும் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா குறுகிய காலத்திலேயே 5 கோப்பையை வென்று கொடுத்து மும்பை வெற்றிகரமான அணியாக ஜொலிக்க முக்கிய காரணமாக திகழ்கிறார்.

இருப்பினும் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்டுள்ள மும்பை அணி நிர்வாகம் குஜராத்திடமிருந்து வலுக்கட்டாயமாக பாண்டியாவை வாங்கி தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது. ஆனால் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடி இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற ரோகித் சர்மா இப்போதும் நல்ல பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகவே இருக்கிறார்.

- Advertisement -

யுவராஜ் அதிருப்தி:
எனவே அப்படிப்பட்ட தரமான அவரை கழற்றி விட்டுள்ள மும்பையின் முடிவை அந்த அணியின் பெரும்பாலான ரசிகர்களே விரும்பவில்லை என்று சொல்லலாம். இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு இன்னும் ஒரு வருடம் மும்பை நிர்வாகம் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் புதிய அணியாக இருந்த குஜராத் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சூழ்நிலையில் 2022 ஐபிஎல் கோப்பையை பாண்டியா வென்று கொடுத்ததாக யுவராஜ் கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்றுள்ள மும்பை கோடிக்கணக்கான ரசிகர்களுடன் மிகப்பெரிய அழுத்தமும் எதிர்பார்ப்பும் கொண்ட அணி என்று யுவராஜ் தெரிவித்துள்ளார். எனவே அந்த அணியில் இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா போன்ற வீரர்களை தலைமை தாங்கி ஹர்டிக் பாண்டியா கோப்பையை வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் சர்மா 5 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாக வென்றவர். அவரை நீக்கியது பெரிய முடிவு. அந்த இடத்தில் நான் பாண்டியா போன்ற ஒருவரை கொண்டு வருவேன். ஆனால் அதற்கு முன் ரோகித் சர்மாவுக்கு ஒரு வருடம் வாய்ப்பு கொடுத்து ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமித்து மொத்த அணியம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்பேன்”

இதையும் படிங்க: விராட் கோலி, ரெய்னா இடத்துல அசத்துன.. அவர் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டாரா வருவாரு.. அஸ்வின்

“வருங்காலத்தை பார்க்கும் மும்பை நிர்வாகத்தின் கண்ணோட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மா இப்போதும் இருக்கும் நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு பெரியதாகும். பாண்டியா நல்ல திறமையைக் கொண்டுள்ளார். ஆனால் குஜராத்தின் கேப்டனாக இருப்பதை விட மும்பையின் கேப்டனாக இருப்பது அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் பெரிய அணி” என்று கூறினார்.

Advertisement