இன்னும் 6 மாசத்துல இந்திய அணியில இடம் கன்பார்ம்.. ஆனா ஒரு கண்டிஷன்.. அபிஷேக் சர்மாவுக்கு – யுவ்ராஜ் சிங் அட்வைஸ்

Yuvraj-and-Abhishek
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளை சந்தித்து பரிதாபத்தில் இருந்த சன் ரைசர்ஸ் அணி கம்மின்ஸ் புதிய கேப்டனாக வந்ததிலிருந்து வேறு லெவலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த ஐபிஎல் தொடருக்கான சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், கிளாசன், மார்க்ரம் போன்ற வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்திருந்தாலும் இந்தியாவை சேர்ந்த துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா ஒவ்வொரு போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

23 வயதான அபிஷேக் ஷர்மா ஒவ்வொரு போட்டியிலும் பவர்பிளேவின் போதே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியையும், சிக்ஸரையும் விளாசி எதிரணியை அழுத்தத்திற்குள் வைக்கிறார். இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள அவர் 288 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அபிஷேக் சர்மா குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் கூறுகையில் : அபிஷேக் ஷர்மா இன்னும் ஆறு மாதத்தில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தயாராகிவிடுவார். தற்போதைய நிலையில் அவரை டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வைக்க முடியாது. ஆனால் இன்னும் ஆறு மாதங்கள் அவர் சரியான பயிற்சியை மேற்கொள்ளும் பட்சத்தில் இந்திய அணிக்காக விளையாட முற்றிலுமாக தயாராகிவிடுவார்.

- Advertisement -

அவருடைய பேட்டிங் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அவரிடம் இருந்து இன்னும் மிகப்பெரிய ஸ்கோர் வரவில்லை. அவருடைய அதிரடி இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என்றாலும் பெரிய ஸ்கோரை அடிக்கும் திறனையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஒரு விடயத்தில் அவர் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட்டு விட்டால் நிச்சயம் அவர் அடுத்த ஆறு மாதத்தில் இந்திய அணியில் விளையாடுவார்.

இதையும் படிங்க : பிளேயர்ஸ் மாற்றத்தால் பிரயோஜனம் இல்ல.. ஆர்சிபி கோப்பை வெல்ல அதை மாத்துங்க.. கிப்ஸ் கொடுத்த ஐடியா

அதோடு பெரிய பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறனை கொண்டுள்ள அவர் சிங்கிள் விளையாடவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விளையாடினால் தான் போட்டியின் சூழலுக்கு ஏற்ப நம்மை தகவைத்துக் கொள்ள முடியும். உலகதரம் வாய்ந்த வீரர்களுக்கு மத்தியில் விளையாடும் போது இன்னும் அவருக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும் என அபிஷேக் சர்மா குறித்து யுவ்ராஜ் சிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement