முதல் குழந்தை விஷயத்தில் கோலியை போல முடிவை எடுத்த யுவராஜ் (அவரின் பதிவில் இதை கவனித்தீர்களா?)

Hazel
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த 2000-மாவது ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2017 ஆம் ஆண்டு வரை 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர ஐபிஎல் தொடரிலும் 132 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் திகழ்ந்த இவர் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய வீரராக இருந்து தொடர் நாயகன் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

yuvi 1

- Advertisement -

கடந்த 2019ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வை அறிவித்த அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி குருத்வாராவில் பாரம்பரிய முறைப்படி அவரது தோழி ஹேசல் கீச் என்பவரை மணந்த யுவராஜ் சிங்கிற்கு தற்போது முதல் குழந்தை பிறந்துள்ளது.

அதனை தனது சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்ட யுவ்ராஜ் அதில் குறிப்பிட்டதாவது : கடவுளின் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எங்களுக்காக பிராத்தனை செய்து கொண்ட ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எங்களுக்கு இந்த ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். இந்த சிறிய குழந்தையை நாங்கள் வரவேற்கும் போது எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது மட்டுன்றி உலகளவில் இருக்கும் அவரது ரசிகர்களும் யுவ்ராஜ் சிங்கிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள இந்த பதிவின் மூலம் விராத் கோலியை போன்றே அவரும் ஒரு முடிவை கையில் எடுத்ததாக தெரிகிறது. அதன்படி ஏற்கனவே விராட் கோலி தங்கள் பெண் குழந்தை சமூக வலைத்தளத்தில் மூலம் பலராலும் அறியப்படாமல் சுதந்திரமாக வளர வேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்தையோ, வீடியோவையும் பகிர வேண்டாம் என்று அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : வெ.இ தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பும் ரோஹித் சர்மா – வெளியேற்றப்பட இருக்கும் வீரர்கள் இதோ

அதன்படியே தற்போது யுவராஜ் சிங்கும் தங்களுக்கு பிறந்திருக்கும் இந்த குழந்தைக்கு பிரைவசி தேவை என்பதனால் எங்களுடைய சொந்த தனிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் காரணமாக யுவராஜ் சிங்கும் அவருடைய முதல் குழந்தை சுதந்திரமாக வளர வேண்டும் என்று நினைப்பதனால் அவரது குழந்தை வளரும் வரை முகத்தை வெளிக்காட்ட மாட்டார் என்று தெரிகிறது.

Advertisement