அவரால எல்லா ஊர்லயும் சப்போர்ட் கிடைக்குது.. தோனி 2011இல் சொன்னதை இப்போவும் சொல்றாரு.. ரஹானே பேட்டி

Ajinkya Rahane 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த ஜாம்பவான் எம்எஸ் தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார். இருப்பினும் அவரை பார்ப்பதற்கு ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு படையாக சூழ்கின்றனர்.

குறிப்பாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 125 டெசிபல் சத்தத்துடன் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தோனிக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். அப்போது ரசிகர்கள் கொடுத்த சத்தத்தை தாங்க முடியாமல் நட்சத்திர வெஸ்ட் இண்டீஸ் வீர் ஆண்ட்ரே ரசல் காதை பொத்திக் கொண்டது வைரலானது.

- Advertisement -

தோனியின் படை:
சொல்லப்போனால் இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த தோனி 2019இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதனால் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடும் அவரை பார்ப்பதற்காக மும்பை, பெங்களூரு, ஹைதெராபாத் என அனைத்து நகரங்களைச் சேர்ந்த ரசிகர்களும் மஞ்சள் உடை அணிந்து தோனி என்ற ஒருவருக்காக மஞ்சள் உடை அணிந்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

இந்நிலையில் தோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தைப் போன்ற ஆதரவு கிடைப்பதாக அஜிங்கி ரஹானே கூறியுள்ளார். அத்துடன் 2011இல் இந்தியாவுக்காக அறிமுகமான போது என்ன சொன்னாரோ அதே ஆலோசனையை சென்னை அணிக்காக அறிமுகமான போதும் தோனி தம்மிடம் கூறியதாக தெரிவிக்கும் ரஹானே இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எங்கே பயணம் செய்தாலும் மஹி பாய் எனும் ஒரே ஒருவரால் நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற சூழ்நிலையை பெறுகிறோம். அது அற்புதமான உணர்வு. அவருடன் சேர்ந்து விளையாடும் போது உங்களால் ஒரு வீரராகவும் மனிதராகவும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். தற்போது மும்பை, மகாராஷ்டிரா போன்ற ஊர்களைச் சேர்ந்த வீரர்கள் சிஎஸ்கே அணியில் விளையாடுகின்றனர். அந்த சூழ்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. 2011இல் மான்செஸ்டரில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான நான் பயிற்சியை முடித்தேன்”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் அதிரடி.. முடித்த 22 ஆஸி வீரர்.. 13 வெற்றிகள்.. லக்னோவின் வீரநடைக்கு முற்றுப்புள்ளி வைத்த டெல்லி

“அப்போது என்னிடம் வந்த தோனி “இத்தனை நாட்களாக எப்படி விளையாடினீர்களோ அதே ஆட்டத்தை இப்போதும் களத்திற்கு சென்று வெளிப்படுத்துங்கள்” என்று சொன்னது இன்று வரை என்னுடன் ஒட்டிக் கொண்டுள்ளது. சொல்லப்போனால் சிஎஸ்கே அணியிலும் “உங்களுடைய ஆட்டத்தை மட்டும் விளையாடுங்கள். எந்த அழுத்தத்தையும் சேர்க்காதீர்கள்” என்று அவர் என்னிடம் சொன்னார். அந்த வகையில் மிகவும் எளிமையாக இருந்து ஒவ்வொருவருக்கும் ஆதரவு கொடுப்பதாலேயே அவர் மகத்தானவராக இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement