வீடியோ : மீண்டும் அத்து மீறிய சாகிப் அல் ஹசன், கோபத்தால் ரசிகர் மீது தாக்குதல் – வங்கதேச ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணின் விளையாடி வரும் வங்கதேசம் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டிக்கு முன்பாக ஒரு தனியார் விழாவுக்கு சென்ற நட்சத்திர வங்கதே வீரர் சாகிப் அல் ஹசன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 வருடங்களாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வங்கதேசத்துக்கு மறக்க முடியாத சில வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வாரும் அவர் அந்நாட்டு ரசிகர்களால் ஜாம்பவானாக கொண்டாடப்படுகிறார். குறிப்பாக ஜேக் காலிஸ், கபில் தேவ் போன்ற வரலாற்றின் மகத்தான ஜாம்பவான் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் நிறைய சாதனைகளை படைத்து நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு வரும் அவரை வங்கதேச ரசிகர்கள் தங்களது ஹீரோவாக தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

கோபமான சாகிப்:
அந்த வரிசையில் தனியார் நிகழ்ச்சி பங்கேற்பதற்காக அவர் வந்ததை அறிந்த ரசிகர்கள் வழக்கம் போல கூட்டமாக சேர்ந்து வரவேற்றார்கள். அப்போது வழக்கம் போல அதிகப்படியான கூட்டத்தால் ஏற்பட்ட தள்ளு முள்ளுக்கிடையே சாகிப் அல் ஹசன் நெரிசலில் சிக்கினார். அந்த சமயம் பார்த்து நிறைய ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்ததால் பரபரப்புடன் அதிக நெரிசல் ஏற்பட்டது. அதனால் அசவுகரியமாக உணர்ந்த சாகிப் அல் ஹசனிடம்மிகவும் நெருக்கம் காட்ட முயற்சித்த ஒரு ரசிகர் அவருடைய தொப்பியை எடுக்க முயற்சித்தார். அதனால் கோபமடைந்த அவர் அதே தொப்பியால் அந்த ரசிகரின் தலையில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சரமாரியாக தாக்கி அடித்தார்.

அதை பார்த்த சக ரசிகர்கள் என்னப்பா பாசத்தை வெளிப்படுத்தியதற்காக இப்படி அடிக்கிறார் என்று அதிருப்தியுடன் பார்த்தார்கள். மேலும் என்ன தான் கூட்ட நெரிசலாக இருந்தாலும் ரசிகர்கள் நெருக்கம் காட்டும் போது அவர்களிடமிருந்து விலகிச் செல்லாமல் அல்லது கோபமான முகத்தை மட்டும் காட்டாமல் அத்துமீறி கையில் கிடைத்த பொருளை வைத்து அடித்தது வங்கதேச ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதனால் ரசிகர்களான நாங்கள் இல்லாமல் நீங்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் அந்நாட்டு ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

முன்னதாக கடந்த வருடம் வங்கதேசத்தில் நடைபெற்ற உள்ளூர் தொடரில் தமக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்காத நடுவர் மீது கட்டுக்கடங்காத கோபத்தை வெளிப்படுத்திய சாகிப் அல் ஹசன் அவரை அடிக்காத குறையாக செயல்பட்டு ஸ்டம்ப்புகளை எட்டி உதைத்து பிடுங்கி எறிந்தது உலக அளவில் வைரலானது. அந்த நிலையில் கடந்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற பிபிஎல் டி20 தொடரிலும் தமக்கு எதிராக ஒய்ட் வழங்கிய அம்பயரை கத்தி கூச்சலிட்டு மிரட்டிய அவர் மற்றொரு போட்டியிலும் களத்திற்குள் சென்று களத்தில் இருந்த 2 நடுவர்களிடம் தனது அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்காததால் கோபத்தை வெளிப்படுத்தினார்.

அத்துடன் தம்மை போன்ற சீனியர் வீரர் தமிம் இக்பாலுடன் அவர் சண்டை போட்டதாகவும் வங்கதேச வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அப்படி தொடர்ந்து கோபத்தை கட்டுப்படுத்தாமல் நடுவர்களை மிரட்டுவது சக அணியில் உள்ள சீனியர் வீரரிடம் சண்டை போடுவது போன்ற செயல்களை செய்து நன்னடத்தையின்றி செயல்பட்டு வரும் சாகிப் அல் ஹசன் தற்போது ரசிகரை கோபத்தால் அடித்ததும் அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க:பிஎஸ்எல் 2023 : தார் ரோட் பிட்ச்சில் 2வது முறையாக அடித்து நொறுக்கப்பட் பாபர் அசாம் அணி – தோல்வியால் படுத்தாரா?

அதனால் செயல்பாடுகளில் மட்டும் ஜாம்பவானாக இருந்தால் போதாது முதலில் பெயருக்கேற்றார் போல் நடுவர்களிடமும் சக வீரர்களிடமும் இந்தளவுக்கு வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ரசிகர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுமாறு அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதன் உச்சகட்டமாக தடை செய்தால் தான் சரிப்பட்டு வருவார் என்றும் சிலர் சாகிப் அல் ஹசனை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

Advertisement