வீடியோ : அளவுக்கடந்த அன்பால் எல்லை மீறி வெறியுடன் கேட்ட ரசிகர் – எஸ்கேப் ஆன ரோஹித் சர்மா, நடந்தது என்ன

ROhit Sharma Fan
- Advertisement -

கடந்த 2 மாதமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ப்ளே ஆப் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் குஜராத் முதல் அணியாகவும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 2வது அணியாகவும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றன. அந்த வரிசையில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் தங்களது முதல் 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் அந்த அணி கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 6 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மோசமான சாதனையைப் படைத்து அவமானத்தை சந்தித்தது. எனவே அதிலிருந்து மீண்டெழுந்து 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த சீசனில் விளையாடி வரும் மும்பை பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியும் பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ், இசான் கிசான் போன்ற முக்கிய வீரர்களின் அதிரடியான செயல்பாடுகளால் 7 வெற்றிகளை பதிவு செய்து போராடி இந்த நிலையை எட்டியுள்ளது.

- Advertisement -

வெறியான ரசிகர்:
அதை தொடர்ந்து மே 21ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தங்களது சொந்த ஊரான வான்கடே மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மும்பை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் மும்பை களமிறங்க உள்ளது. அந்த இக்கட்டான போட்டியில் களமிறங்குவதற்காக லக்னோவில் நடைபெற்ற கடந்த போட்டியை முடித்து விட்டு மும்பை திரும்பிய ரோகித் சர்மா தலைமையிலான அணியினர் தீவிர வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக லக்னோவில் இருந்து விமானம் வாயிலாக திரும்பிய அவர் மும்பை விமான நிலையத்தில் வந்த போது வழக்கம் போல ஏராளமான ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். அந்த கூட்ட நெரிசலுக்கு மத்தியில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் வந்த ரோகித் சர்மா மும்பை அணியின் பேருந்தில் ஏறுவதற்காக மிகவும் நெருக்கமாக வந்த ஒரு வெறித்தனமான ரசிகர் தன்னுடைய கண்ணம் மற்றும் உதடுகளில் முத்தமிடுமாறு கையை வைத்து வைத்து காட்டினார். அதை சற்றும் எதிர்பாராததால் ஆச்சரியமடைந்த ரோகித் சர்மா “யாருப்பா நீ அந்த பக்கம் போ” என்று சொல்லி விட்டு பேருந்தில் பத்திரமாக ஏறி சென்றார்.

- Advertisement -

பொதுவாகவே கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களை தங்களுடைய ஹீரோவாக தலையில் வைத்து கொண்டாடும் இந்திய ரசிகர்கள் அவர்களை நேரில் பார்ப்பதற்காக எந்த எல்லையும் கடப்பதற்கு தயங்குவதில்லை. குறிப்பாக பாதுகாப்பை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தங்களுக்கு பிடித்த வீரர்களின் காலில் விழுவது, கட்டிப்பிடிப்பது, புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்றவைகளை தான் கடந்த காலங்களில் நிறைய ரசிகர்கள் செய்ததை பார்த்துள்ளோம். ஆனால் ரோகித் சர்மாவின் மீது இருக்கும் தீவிரமான அன்பாலும் வெறியாலும் இந்த ரசிகர் எல்லையை கடந்து முத்தமிடுமாறு கேட்டது இதர ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ் படத்தில் வடிவேலு நகைச்சுவை காட்சியில் வரும் “ராரா சரசுக்கு ராரா” என்ற வகையில் அந்த ரசிகர் முத்தம் கேட்ட போது ரோகித் சர்மா கொடுத்த ரியாக்சன் பார்க்கும் இதர ரசிகர்களை சிரிப்பை ஏற்படுத்துகிறது. அதைத்தொடர்ந்து நடைபெறும் அந்தப் போட்டியில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத்தை எப்படியாவது தோற்கடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்புடன் மும்பை விளையாட உள்ளது.

இதையும் படிங்க:CSK vs DC : மைதானத்தில் எந்த குறையும் இல்ல. எங்களது தோல்விக்கு இதுவே காரணம் – டேவிட் வார்னர் வருத்தம்

குறிப்பாக எப்படியும் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவார்கள் என்ற நிலைமையில் சூரியகுமார் போன்ற முக்கிய வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அந்த வெற்றி கிடைக்கும் என்றே சொல்லலாம்.

Advertisement