ப்ளீஸ் அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம். அவர் ஒரு ஸ்பெஷலான டேலன்ட் – வாசிம் ஜாபர் பதிவு

jaffer6
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிலும் முக்கிய இரண்டு மாற்றங்களாக ஷமிக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் மற்றும் துவக்க வீரர் பிரித்திவி ஷாவுக்கு பதிலாக சுப்மன் கில் ஆகியோர் அணிக்கு அறிமுகமாயினர். முதல் போட்டியில் இந்திய அணி அடைந்த மோசமான தோல்விக்கு பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இளம் வீரரான சுப்மன் கில் முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் அரைசதம் தவறவிட்டாலும் இரண்டாவது இன்னிங்சில் போது ஆட்டமிழக்காமல் அவர் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது பலராலும் பாராட்டப்பட்டது. அறிமுக போட்டியிலேயே சிறப்பாக விளையாடி உள்ள இவரை ரசிகர்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் என அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பல இந்திய முன்னாள் வீரர்களோடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ஆனால் அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்று கில்லுக்கு ஆதரவாக தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்தினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் :

கில் ஒரு தனிச்சிறப்புமிக்க வீரர். அவரை அவரது ஆட்டத்தை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அவரை அனுபவித்து விளையாட விடுங்கள். அப்பொழுதுதான் அவர் சிறப்பாக விளையாட முடியும். மேலும் யாருடனாவது அவரை ஒப்பிட்டு பேசினால் அது அவருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். அவர் முன்னாள் வீரர் யாரும் கிடையாது. அவர் முதல் கில் அவ்வளவுதான், அதுமட்டும்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Gill 2

வழக்கத்திற்கு மாறான அதிக எதிர்ப்பினால் திறமை படைத்த பல வீரர்களை நாம் இழந்துள்ளோம் என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். முதலாவது டெஸ்ட் போட்டியில் சொதப்பிய பிரித்திவி சாவிற்கு பதிலாக இந்த போட்டியில் சுப்மன் கில் இரண்டாவது போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement