சாம்சன், ராகுல், பண்ட் ஆகியோரில்.. 2024 டி20 உ.கோ வெல்ல தேவையான தரமான கீப்பர் யார்? மஞ்ரேக்கர் தேர்வு

Sanjay Manjrekar 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 தொடரில் விளையாடப் போகும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது. அதில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. ஏனெனில் அந்த ஒரு இடத்திற்கு 38 வயதில் தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், இஷான் கிசான், ஜிதேஷ் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அதில் ஏற்கனவே கடந்த உலகக் கோப்பையில் சுமாராக விளையாடியதால் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதே போல இஷான் கிசான், ஜிதேஷ் சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிக்க தவறுவதால் உலகக் கோப்பையில் இடம் கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சஞ்சய் மஞ்ரேக்கர் தேர்வு:
இருப்பினும் கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி நல்ல ரன்கள் குவித்துள்ளனர். அதே போல காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரிசப் பண்ட் டெல்லி அணிக்காக அபாரமாக விளையாடி இதுவரை 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்று மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார். அதனால் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்க இந்த 3 வீரர்களிடையே உண்மையான போட்டி காணப்படுகிறது.

இந்நிலையில் கேஎல் ராகுல், சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்ட் தான் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். ஏனெனில் நாக் அவுட் போன்ற அழுத்தமான போட்டியில் 60 பந்தில் சதமடித்து எதிரணியிடமிருந்து வெற்றியை பறிக்கும் திறமை ரிஷப் பண்ட் கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது போட்டிக்கு நிறைய வீரர்கள் இருப்பதாலேயே நாம் இதைப்பற்றி விவாதிக்கிறோம். சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகியோர் சுவாரசியமான தேர்வுகள். ஆனால் ரிஷப் பண்ட்டிடம் ஒரு விஷயம் இருக்கிறது. அதனால் அவரை நான் 15 பேர் கொண்ட அணியில் தேர்ந்தெடுத்து உலகக்கோப்பை செமி ஃபைனல் போன்ற பெரிய அழுத்தமான போட்டியின் பிளேயிங் லெவனிலும் தேர்ந்தெடுப்பேன்”

இதையும் படிங்க: 206 ரன்ஸ்.. மிரட்டிய படிடார்.. அசத்திய விராட் கோலி.. சுரேஷ் ரெய்னாவை முந்தி தனித்துவ சாதனை

“இந்த பையனால் அது போன்ற போட்டியில் 60 பந்துகளில் சதமடித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும். தற்போதைய இந்திய அணியில் அது போன்ற வீரர்கள் அதிகமாக இல்லை. சமீப காலங்களாக ஃபைனல் போன்ற பெரிய போட்டிகளில் இந்தியா அசத்துவதில்லை. ஆனால் அந்த அழுத்தமான போட்டிகளில் தான் ரிசப் பண்ட் போன்றவர் இன்னும் அதிகமாக அசத்தக்கூடியவர். அந்த அழுத்தமான சூழ்நிலைகளில் அவர் ரிலாக்ஸாக விளையாடக்கூடியவர்” என்று கூறினார்.

Advertisement