7 பேரால் முடியாது டிராவிட்.. 2024 டி20 உ.கோ வெல்ல இந்த டெம்ப்ளேட்டை யூஸ் பண்ணுங்க.. சித்து அட்வைஸ்

Navjot Sidhu 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் வரலாற்றில் முதலும் கடைசியுமாக தோனி தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன் பின் ஐபிஎல் தொடரில் கிடைத்த பல தரமான வீரர்களுடன் களமிறங்கியும் 17 வருடமாக இந்தியா தோல்வியை சந்தித்து வருகிறது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய இந்தியா வழக்கம் போல செமி ஃபைனலில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இருப்பினும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுள்ள இந்தியா இம்முறை 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ள வீரர்களை உலகக் கோப்பை அணியில் தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டிராவிட்டுக்கு அட்வைஸ்:
இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 ஸ்பெசலிஸ்ட் பவுலர்கள் மற்றும் 6 ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன்களுடன் விளையாடுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆலோசனை கொடுத்துள்ளார். ஒருவேளை 6 பேட்ஸ்மேன்களால் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாமல் போனால் 7வது பேட்ஸ்மேன் பெற்றுக் கொடுக்க மாட்டார் என்று சித்து கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களை தேர்ந்தெடுங்கள் என்பதே ராகுல் டிராவிட்டுக்கு என்னுடைய நேரடியான ஆலோசனையாகும். அணியின் சரிவு என்பது கேரக்டரில் இருந்து தான் உருவாகிறது. எனவே உங்கள் கேரக்டரில் நீங்கள் சமரசம் செய்யும் போது வெற்றி கிடைக்கிறது”

- Advertisement -

“உங்களிடம் ரவீந்திர ஜடேஜா, குல்தீப், ரவி பிஸ்னோய் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுங்கள். ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் மயங் யாதவை தேர்வு செய்யலாம். கலீல் அகமது, மோசின் கான், முகேஷ் குமார் உட்பட இந்தியாவுக்காக விக்கெட் டேக்கிங் பவுலர்கள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்”

இதையும் படிங்க: கடவுளே பணத்துக்காக இப்படியா பண்ணுவீங்க.. இதெல்லாம் சட்டவிரோதம்.. ஐபிஎல் மீது வாசிம் அக்ரம் அதிருப்தி

“இம்ரான் கான் அல்லது ஸ்டீவ் வாக் போன்ற மகத்தான கேப்டன்கள் எப்போதுமே விக்கெட் எடுக்கும் பவுலர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். அது தான் வெற்றிக்கான ரகசியமாகும். ஆனால் இந்த டெம்ப்ளேட்டை நம்முடைய அணி புறக்கணிக்கிறது. 6 பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்காமல் போனால் 7வது பேட்ஸ்மேனாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement