இதே நினைப்போட முடிவெடுத்தா இந்திய அணி பாதாளதுக்கு போய்டும்.. பாண்டியா பற்றி பிசிசிஐ’யை எச்சரித்த கில்கிறிஸ்ட்

Adam Gilchrist
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இத்தனைக்கும் 5 கோப்பைகளை கேப்டனாக வென்ற ரோகித் சர்மா மும்பை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றினார். ஆனாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவதாக மும்பை நிர்வாகம் அறிவித்தது.

குறிப்பாக மும்பை அணியில் ரோகித் சர்மா தலைமையில் வளர்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா இந்திய அணியிலும் முதன்மை ஆல் ரவுண்டராக உருவெடுத்தார். இருப்பினும் 2022 சீசனில் மும்பை அணியால் விடுவிக்கப்பட்ட அவர் குஜராத் அணிக்காக முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்தார். அதன் காரணமாக அவரை வலுக்கட்டாயமாக குஜராத்திடமிருந்து வாங்கிய மும்பை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்தது.

- Advertisement -

எச்சரித்த கில்கிறிஸ்ட்:
அதற்கு ஆரம்பம் முதலே மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு வருகின்றனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றி 5 தோல்விகளை பதிவு செய்துள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் தவிக்கிறது. அந்த தோல்விகளுக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத பாண்டியா கேப்டனாகவும் சுமாராக முடிவுகளை எடுத்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அந்த சூழ்நிலையில் ஏற்கனவே ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ தீர்மானித்துள்ளது. அதனாலேயே 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வெடுத்த ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா பல தொடர்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் நுணுக்கங்கள் ரீதியாக பாண்டியா இன்னும் கேப்டனாக வளரவில்லை என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே அவரை டி20 அணியின் அடுத்த கேப்டனாக நியமித்தால் அது இந்தியாவை பாதாளதுக்கு தள்ளிவிடும் என்று மறைமுகமாக எச்சரிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “நுணுக்கமான திட்டங்கள் ரீதியாக அவர் தனது வேலையை சரியாக செய்வதாக நான் பார்க்கவில்லை. சில நேரங்களில் அவர் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள், பந்து வீச்சில் சில மாற்றங்கள் செய்கிறார்”

இதையும் படிங்க: மாத்தி எழுதாதீங்க.. மும்பைக்கு விளையாடினால் மூளை வெடிச்சுரும்.. ஆனா சிஎஸ்கே வேற மாதிரி டீம்.. ராயுடு விளக்கம்

“மற்ற படி ஒட்டுமொத்தமாக கேப்டன்ஷிப்புக்கு தேவையான உத்திகளை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்” என கூறினார். அதே நிகழ்ச்சியில் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் பேசியது பின்வருமாறு. “மும்பை போன்ற ஏற்கனவே வெற்றிகரமாக இருக்கும் அணியை வழி நடத்துவது கடினமாகும். குஜராத் அணியில் பாண்டியா நன்றாக கேப்டன்ஷிப் செய்தார். அதை அவர் இழக்க மாட்டார். இருப்பினும் இன்னும் வளர்ந்து வரும் அவர் தன்னுடைய கேப்டன்ஷிப்பில் வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement