ரோஹித் சர்மா கிட்ட இன்சமாம் உல் ஹக் மாதிரி அந்த ஒரு எக்ஸ்ட்ரா திறமை இருக்கு – வாசிம் அக்ரம் கருத்து

Rohit-And-Inzamam
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்து வருகிறார். குறிப்பாக பவர்பிளே ஓவர்களிலேயே அவர் அதிரடியாக விளையாடி ரன்களை எடுப்பதனால் பின்னால் வரும் வீரர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

இந்த தொடரில் இதுவரை 9 போட்டியில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 121 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்டுடன் 503 ரன்களை குவித்துள்ளார். இப்படி ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுவதால் அணிக்கும் நல்ல ஸ்கோர் கிடைக்கிறது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் பத்து ஓவர்களில் மட்டும் 307 ரன்களை ரோகித் சர்மா அடித்து அசத்தியுள்ளார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக பந்துவீச்சாளர்களுக்கும் அவருக்கு எதிராக சவாலான நிலையே இருக்கிறது.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த அசத்தலான ஆட்டம் இன்சமாம் உல் ஹக்கை நியாபகப்படுத்துவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இன்சமாம் உல் ஹக் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் நேரம் இருக்கும்.

- Advertisement -

அதேபோன்று ரோகித் சர்மாவிற்கும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாடும்போது கூடுதலான நேரம் கிடைக்கிறது. அவரது கை மற்றும் கண்களின் பார்வையும் வெகு சிறப்பாக இருப்பதால் அவரால் எளிதாக வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து விளையாட முடிகிறது. அவர் இப்படி போட்டியின் துவக்கத்திலேயே அதிரடியாக ரன்களை குவிப்பதால் பின்னால் வரும் வீரர்களுக்கும் ஆட்டம் சாதகமாக இருக்கிறது.

இதையும் படிங்க : சச்சின் – ரோஹித் கனெக்ஷன்.. தந்தையையே மிஞ்சிய மகன்.. மாபெரும் உ.கோ சாதனை படைத்த நெதர்லாந்து வீரர்

ரோஹித் சர்மா பேட்டிங்கை மிகவும் எளிதாக காண்பிக்கிறார். எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி இயற்கையான அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். முதல் ஓவரிலிருந்தே அவர் அடிக்க செல்வது அணிக்கும் பயனுள்ளதாக மாறுகிறது. ரோகித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் இருக்கும்போது எதிரணியில் இருக்கும் பவுலர்களுக்கு நிச்சயம் சிரமமாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு அவருடைய ஆட்டம் அற்புதமாக இருப்பதாக வாசிம் அக்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement