பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்ல இதான் ஒரே வழி.. சிரிக்க வைக்கும் வாசிம் அக்ரம் ஐடியா

Wasim Akram
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 1992 போல கோப்பையை வென்று தங்களை புறக்கணித்து வரும் இந்தியர்களுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவிடம் 8வது முறையாக தோற்று ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்தது.

அதை தொடர்ந்து கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1 வித்தியாசத்தில் வீழ்ந்தது. இருப்பினும் அதன் பின் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற அந்த அணி செமி ஃபைனல் வாய்ப்புக்காக காத்திருந்த அதிர்ஷ்டம் நேற்றுடன் முடிந்து போனது என்றே சொல்லலாம்.

- Advertisement -

வாசிம் அக்ரம் ஆலோசனை:
அதாவது பெங்களூருவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கையை தோற்கடித்த நியூசிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தங்களுடைய கடைசி போட்டியில் 287 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே செமி ஃபைனல் செல்ல முடியும் என்ற அசாத்தியமற்ற சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் இத்தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து பின்னர் இங்கிலாந்தை களத்திற்கு வரவிடாமல் பெவிலியனில் வைத்து பூட்டிவிட்டால் பாகிஸ்தான் செமி ஃபைனல் சென்று விடும் என்று ஜாம்பவான் வாசிம் அக்ரம் கலகலப்பான ஐடியா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதாவது மேத்யூஸ் ஹெல்மெட் பழுதாகி 2 நிமிடம் தாமதமாக வந்ததால் அவுட் கொடுக்கப்பட்டதைப் போல முதல் இன்னிங்ஸ் முடிந்து அடுத்த இன்னிங்ஸ் துவங்குவதற்காக அதற்கடுத்த 20 நிமிடங்கள் முடிவதற்குள் 2வது அணி களத்திற்கு வரவேண்டும் என்பது விதிமுறையாகும். அந்த வகையில் இங்கிலாந்தை வரவிடாமல் அறையில் வைத்து பூட்டினால் டைம் அவுட் விதிமுறைப்படி வென்று 2 புள்ளிகளை பெறுவது மட்டுமே பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்ல ஒரே வழி என்று வாசிம் அக்ரம் சொன்னதாக ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தொகுப்பாளர் கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க: உங்க சவகாசமே வேணாம்.. அதிரடியான முடிவை எடுத்த வங்கதேச கோச்.. ஜாம்பவான் ஆலன் டொனால்ட்

“இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக வாசிம் பாய் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஐடியா கொடுத்தார். பின்னர் இங்கிலாந்தை உடை மாற்றும் அறைக்குள் வைத்து 20 நிமிடங்கள் பூட்டிவிட்டால் நாம் வெல்ல முடியும் என்று தெரிவித்தார்” என சொன்ன போது அங்கிருந்த வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் வீரர்கள் அனைவரும் சிரித்தார்கள். மேலும் அப்போது இங்கிலாந்து அணியை மொத்தமாக அறைக்குள் பூட்டி விட்டால் பாகிஸ்தான் வெல்லும் என்று முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக்கும் கிண்டலான பதிலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement