தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் அடுத்த 2 போட்டிகளில் விளையாடமாட்டார் – வெளியான அறிவிப்பு (ஏன் தெரியுமா?)

sundar 1
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு முக்கிய வீரர்களை அணியில் இணைத்துள்ள சன்ரைசர்ஸ் அணி துவக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் கடந்த இரண்டு போட்டிகளாகவே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வழக்கம்போல் சொதப்பிய சன் ரைசர்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. அதன் பிறகு மூன்றாவது போட்டியில் பலம் வாய்ந்த சிஎஸ்கே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

CSK vs SRH 3

- Advertisement -

பின்னர் குஜராத் அணியையும் அதே போன்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த இரண்டு போட்டியின் வெற்றிகளிலுமே தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள் என்றே கூறலாம்.

ஏனெனில் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் குஜராத் அணியின் வீரர்களை அடிக்க விடாமல் கட்டுப்பாட்டிற்குள் வைத்தனர். இந்நிலையில் இப்படி சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

sundar 2

ஏனெனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது பீல்டிங் செய்கையில் : கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் பகுதியில் காயம் அடைந்த வாஷிங்டன் காயம் அதிகமாக இருப்பதன் காரணமாக சிகிச்சை எடுக்க நாட்கள் ஆகும் என்பதனால் அடுத்த இரண்டு போட்டிகளை அவர் தவற விடுகிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் பீல்டிங் இன் போது ஏற்பட்ட காயம் காரணமாக கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பலத்த அடி வாங்கியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரை தற்போது எங்கள் அணியின் மருத்துவ நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர். அவர் பந்து வீச இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரின் இந்த இழப்பு ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சம்பளம் தவிர ஒவ்வொரு போட்டியிலும் லட்சத்தை அசால்ட்டாக வாங்கும் இளம் வீரர் – பாராட்டுடன் கலாய்க்கும் ரசிகர்கள்

ஏனெனில் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் அவர் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுக்க கூடியவர் என்பதால் அவரது இடத்திற்கு மாற்றுவீர்கள் என்று யாரை தேர்வு செய்வது என்ற சிக்கலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement