- Advertisement -
உலக கிரிக்கெட்

மைதானத்தில் இருந்து உடல்நலக்குறைவினால் பாதுகாப்பாளர்கள் உதவியுடன் வெளியேறிய ரிச்சர்ட்ஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் நேற்று துவங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி மற்றும் துவக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர்.

- Advertisement -

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் பங்கேற்று நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அங்கேயே மயங்கி விழுந்த அவரை மைதான காப்பாளர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட உடலில் உள்ள அதிக வெப்பம் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Published by