IPL 2023 : 17 ஓவரில் பெற வேண்டிய வெற்றியை விட சாதனை முக்கியமா? சுயநலமாக விளையாடிய குஜராத் வீரரை வெளுக்கும் சேவாக்

Sehwag
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 18வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மொஹாலியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் போராடி 153/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்தியூ சார்ட் 36 (24) ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 154 ரன்கள் துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில்லுடன் இணைந்து 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிதிமான் சஹா 5 பவுண்டரியுடன் அதிரடியாக 30 (19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Mohit Sharma GT vs PBKS

- Advertisement -

அடுத்து வந்த சாய் சுதர்சன் 2வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 19 (20) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த சில ஓவர்களில் கேப்டன் பாண்டியாவும் 8 (11) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட சுப்மன் கில் அரை சதமடித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 (49) ரன்கள் குவித்து சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் பதறாமல் செயல்பட்ட ராகுல் திவாட்டியா பவுண்டரியுடன் 5* (2) ரன்களும் டேவிட் மில்லர் 17* (18) ரன்களும் எடுத்து 19.5 ஓவரில் குஜராத்தை வெற்றி பெற வைத்தனர்.

சேவாக் விமர்சனம்:
முன்னதாக இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் ஆரம்பம் முதலே மெதுவாக விளையாடியது எதிர்புறம் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தது. குறிப்பாக சமீப காலங்களில் அடுத்தடுத்த சதங்களை அடித்து உச்சகட்ட பார்மில் இருந்தும் இப்போட்டியில் 10 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து நன்கு செட்டிலாகியும் மெதுவாக விளையாடிய அவர் 40 பந்துகளில் 50 ரன்களை தொட்ட பின்பு தான் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஒருவேளை சற்று முன்னதாகவே அவர் வேகமாக செயல்பட்டிருந்தால் கடைசி ஓவர் வரை போராடாமல் குஜராத் முன்கூட்டியே வென்றிருக்கும்.

Shubman Gill

சொல்லப்போனால் கேப்டன் ஹர்டிக் பாண்டியாவும் இவ்வாறு கடைசி ஓவர் வரை போட்டி செல்வதை தாம் விரும்பவில்லை என்று போட்டியின் முடிவில் மறைமுகமாக விமர்சித்தார். இந்நிலையில் 17 ஓவரிலேயே முடிய வேண்டிய இப்போட்டி சுப்மன் கில் மெதுவாக விளையாடியதால் கடைசி ஓவர் வரை சென்றதாக முன்னாள் வீரர் சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அணியின் வெற்றிக்காக விளையாடாமல் அரை சதமடித்த பின்பு தான் அவர் அதிரடியை துவக்க முயற்சித்ததாக சேவாக் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இப்படி அணியின் நலனை மறந்து சொந்த சாதனைகளுக்காக விளையாடினால் கிரிக்கெட் ஒருநாள் உங்களுடைய கன்னத்தில் அறைந்து விடும் என்று கடுமையாக விமர்சித்துள்ள சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அவர் 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஆனால் எப்போது அரை சதத்தை தொட்டார்? அவர் 41 – 42 பந்துகளில் இருக்கும் போது தான் தன்னுடைய அரை சட்டத்தை தொட்டார். அதன் பின்பு தான் அடுத்த 7 – 8 பந்துகளில் அடுத்த 17 ரன்களை அடித்தார். அதாவது அரை சதமடித்த பின்பு தான் அவர் அதிரடியாக விளையாட முயற்சித்தார்”

sehwag

“ஒருவேளை அந்த அதிரடியை அவர் முன்னதாகவே முயற்சித்திருந்தால் குஜராத் கடைசி ஓவருக்கு பதிலாக 17வது ஓவரிலேயே வென்றிருக்கும். பொதுவாக முதலில் நான் அரை சதமடிக்கிறேன் பின்னர் அணியை வெற்றி பெற வைக்கிறேன் என்ற எண்ணத்துடன் நீங்கள் விளையாட கூடாது. நீங்கள் உங்களுடைய சொந்த சாதனைகளை நினைக்கும் போது ஒருநாள் அதற்காக கிரிக்கெட் உங்களுடைய கன்னத்தில் கடுமையாக அறையும். நீங்கள் எப்போதும் இவ்வாறு நினைக்க கூடாது”

இதையும் படிங்க:IPL 2023 : வீட்ல உட்காந்துருந்தேன், அவர் தான் நெட் பவுலரா கூட்டிகிட்டு வந்து காப்பாத்துனாரு – மோஹித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி

“ஒருவேளை நீங்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியிருந்தால் முன்கூட்டியே அரை சதத்தையும் அடித்து உங்களது சாதனையையும் முன்கூட்டியே தொட்டு அணிக்காக நிறைய பந்துகளை மீதம் கொடுத்திருக்க முடியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல அடுத்ததாக பாண்டியா, மில்லர், திவாடியா என அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருந்த நிலையில் அரை சதத்தை தொட வேண்டும் என்பதற்காகவே சுப்மன் கில் சுயநலத்துடன் மெதுவாக விளையாடியது தெளிவாகிறது.

Advertisement