உலககோப்பை தொடரில் நம்பர் 4 ஆம் இடத்தில் இவர் விளையாடுனா தான் சரியா இருக்கும் – சேவாக் கருத்து

Sehwag
- Advertisement -

எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரினை கைப்பற்றியிருந்த வேளையில் இந்த தொடரில் முன்னணி வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷமி, பும்ரா, அஸ்வின் என அனைவருமே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

மேலும் பேட்டிங் துறையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோரில் துவங்கி விராட் கோலி, கே.எல் ராகுல், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் என அனைவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நான்காவது இடத்தில் இறங்கப்போகும் வீரர்? குறித்த விவாதம் இன்றளவும் இருந்து வருகிறது.

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது நான்காவது இடத்தில் களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதே வேளையில் பின் வரிசையில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். இப்படி இருவருமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த வேளையில் நான்காவது இடம் யாருக்கு? என்கிற குழப்பமே ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக் தற்போது தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் ஆறாம் இடத்தில் களமிறங்க கூடியவர். அவரை நான்காம் இடத்தில் களம் இறக்குவது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை. அதே வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து தனது பார்மை நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க : காந்த குரல் நாயகன்கள்.. பிஷப், சாஸ்திரி, இயன் ஸ்மித் முதல் டிகே வரை – ரசிகர்களை மகிழ்விக்கும் 2023 உ.கோ வர்ணனையாளர்கள் லிஸ்ட்

அதுமட்டும் இன்றி கடந்த சில வருடங்களாகவே அவர் நான்காவது இடத்திலிருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டை போன்றே ஒருநாள் கிரிக்கெட்டிலும் கடைசி கட்டங்களில் அதிரடி காண்பிக்கிறார். எனவே என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவை காட்டிலும் ஷ்ரேயாஸ் ஐயர் தான் நான்காவது இடத்திற்கு பொருத்தமானவர் அவரே இந்திய அணியின் நான்காவது வீரராக களமிறங்க வேண்டும் என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement