கண்டிப்பா 2023 உ.கோ தொடரின் அந்த டாப் 3 சாதனை லிஸ்ட்ல விராட் கோலி இருப்பாரு.. ஏபிடி உறுதி

ABD-Virat
- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் இப்போதே நடைபெற்று வருகின்றன. அதில் இறுதிக்கட்டமாக தயாராகி கோப்பையை வெல்வதற்காக சொந்த மண்ணில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் பயிற்சிகளை செய்து வருகின்றன. இதைத் தொடர்ந்து அக்டோபர் 5ஆம் தேதி துவங்கும் இத்தொடரில் பேட்ஸ்மேன்கள் அதிக ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் 2011 போல சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கும் இந்திய அணியில் தற்போது அனைத்து பேட்ஸ்மேன்களுமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக துவக்க வீரர் சுப்மன் கில் இந்திய மைதானங்களில் எதிரணி பவுலர்களை அசால்டாக எதிர்கொண்டு பெரிய ரன்களை குவிக்கும் நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 முதுகெலும்பு வீரர்கள் சமீபத்திய ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏபிடி நம்பிக்கை:
அதே சமயம் ஜோஸ் பட்லர், கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் போன்ற நிறைய நட்சத்திர வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய சூழ்நிலைகளை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாக இந்த தொடரில் இந்திய வீரர்களுக்கு நிகராக வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிப்பார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவிக்கும் டாப் 3 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் நிச்சயமாக விராட் கோலி இருப்பார் என்று ஏபி டீ வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு இது அற்புதமான உலகக்கோப்பையாக இருக்கும். குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கும் டாப் 3 வீரர்களில் நிச்சயமாக அவரும் ஒருவராக இருப்பார்”

- Advertisement -

“சொல்லப்போனால் இத்தொடரில் அவர் இந்தியாவுக்காக சில முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடுவார். அதிலும் குறிப்பாக அதிகப்படியான அழுத்தத்தில் இந்தியா தடுமாறும் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு கடினமான சூழ்நிலைகளை சமாளித்து விராட் கோலி உங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: விராட் கோலி இல்ல.. அவங்க தான் எனக்கு பிடித்த 2 இந்திய பிளேயர்ஸ் – சடாப் கான் பேட்டி

அவர் கூறுவது போல 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அழுத்தமான சூழ்நிலையில் அபார இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்தார். எனவே தமக்கு மிகவும் பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை நிச்சயமாக அவர் பெரிய ரன்களை குவிப்பார் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement