நான் பேட்டிங் பண்ண போது வந்த மெசேஜ் இதுதான். 49 ஆவது சதத்தில் உள்ள சீக்ரெட் குறித்து – விராட் கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியானது நவம்பர் 5-ஆம் தேதியான இன்று கொல்கத்தா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 121 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சதம் விளாசிய விராட் கோலி பிறந்த நாளில் சதம் அடித்ததோடு மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையையும் இன்று சமம் செய்தார். கடந்த போட்டியிலேயே சதத்தை நெருங்கி அதனை தவற விட்ட விராட் கோலி இம்முறை சதம் அடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் தான் பிறந்த நாளில் அடித்த இந்த 49-வது சதம் குறித்து போட்டியின் இடைவெளியில் பேசிய விராட் கோலி கூறுகையில் : இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று சவாலாக இருந்தது. ஆனாலும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்ததால் அந்த முமென்ட்டத்தை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன்.

அதோடு துவக்க ஓவர்கள் கடந்து மிடில் ஓவர்களின் போது பந்து சற்று நின்று திரும்பி வந்தது. மேலும் 10 ஓவர்களுக்கு பிறகு பந்து மிகவும் மெதுவாக ஆனதால் நான் இறுதிவரை சற்று கவனத்துடன் விளையாட எண்ணினேன். அப்படி நான் விளையாடும் போது டீம் மேனேஜ்மென்டிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் நான் இந்த போட்டியை இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்றும் என்னை சுற்றி மற்ற வீரர்கள் விளையாடுவார்கள் என்றும் எனக்கு அவர்கள் செய்தி அனுப்பி இருந்தனர்.

- Advertisement -

அதன்படியே நான் இறுதிவரை நிற்க வேண்டும் என்று ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடினேன். மற்றொருபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆசிய கோப்பை தொடரின் போதே நான் மூன்றாவது இடத்திலும், அவர் நான்காவது இடத்திலும் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டதால் எங்களுக்கு இடையேயான பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது. ஹார்டிக் பாண்டியா இந்த தொடரில் இல்லை என்பதால் ஒன்று இரண்டு விக்கெட்டுகளை விட்டால் கூட அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க : இந்தியா 326 ரன்ஸ் அடிச்சாலும் பவுலிங்கில் தரமான சம்பவத்தை செய்த கேஷவ் மகாராஜ் – விவரம் இதோ

எனவே போட்டியில் கடைசிவரை நான் நிற்க வேண்டும் என்று நினைத்தே இந்த சதத்தையும் அடித்துள்ளேன். இப்படி எனக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றி. பிறந்தநாளில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் மத்தியில் நான் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மைதானம் ஸ்லோவாக இருப்பதினால் நிச்சயம் எங்களது பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட்டுகளை எடுத்து தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துவார்கள் என விராட் கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement