RCB vs SRH : நான் செஞ்சுரி அடிப்பேன்னு போட்டிக்கு முன்னாடியே அவரு என்கிட்ட சொன்னாரு – விராட் கோலி பூரிப்பு

Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-வது போட்டியானது ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

RCB vs SRH

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 19.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டை மட்டும் இழந்து 187 ரன்களை குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னணி வீரரான விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 100 ரன்களை குவித்து அசத்தினார். அதோடு ஐபிஎல் தொடரில் தனது ஆறாவது சதமாக இந்த சதத்தை அவர் பதிவு செய்தார்.

Kohli

இந்நிலையில் இந்த போட்டியின் போது தான் செஞ்சுரி அடிப்பதை முன்கூட்டியே டூபிளெஸ்ஸிஸ் தன்னிடம் கூறிவிட்டார் என விராட் கோலி போட்டி முடிந்து ஒரு தகவலை தெரிவித்தார். இது குறித்த அவர் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் பேட்டிங் செய்ய களம் இறங்குவதற்கு முன்னதாகவே என்னிடம் கேப்டன் டூப்ளிசிஸ் வந்து நிச்சயம் இந்த போட்டியில் டாப் 3 வீரர்களில் ஒருவர் சதம் அடிக்கப்போகிறோம் என்று என்னுடைய உள்ளுணர்வு கூறுவதாக என்னிடம் தெரிவித்தார். அதற்கு நீங்கள் தானே சதம் அடிக்கப்போகிறீர்கள்? என்று நான் அவரிடம் சொன்னேன்.

இதையும் படிங்க : IPL 2023 : உங்களுக்கு அக்கறைன்னா நீங்க தான் அட்வைஸ் கேட்கணும், கவாஸ்கர் சொல்ல மாட்டாரு – இளம் இந்திய வீரரை விளாசிய சேவாக்

ஆனால் டூப்ளிசிஸ் நீங்கள் (விராட் கோலி) தான் இன்றைய போட்டியில் சதம் அடிக்க போகிறீர்கள் என்று கூறினார். அவர் கூறியது போலவே நானும் சதம் அடித்தேன் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement