IPL 2023 : சொந்த சாதனைகளுக்காக சுயநலமா விளையாடாதீங்க – சைமன் டௌல் விமர்சனத்துக்கு விராட் கோலியின் பதில் இதோ

Simon Doull
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து தடுமாறி வருகிறது. முன்னதாக அந்த அணிக்கு 2008 முதல் விளையாடி 2013 முதல் கேப்டனாக செயல்பட்டு ஏராளமான ரன்களை விளாசி எவ்வளவோ போராடியும் கோப்பையை வெல்ல முடியாத விராட் கோலி கடந்த வருடம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். அந்த நிலையில் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போது நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் இந்த தொடரில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து முதல் போட்டியிலேயே 82* ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

Virat Kohli

- Advertisement -

அதே போல லக்னோவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 61 (44) ரன்கள் எடுத்தும் வழக்கம் போல பெங்களூரு பவுலர்கள் அதை பந்து வீச்சில் வாரி வழங்கியதால் இறுதியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. அதை விட அந்தப் போட்டியில் 6 ஓவர்களில் அதிரடியாக விளையாடி விரைவாக 42 ரன்கள் எடுத்த விராட் கோலி பவர்பிளே முடிந்ததும் ஃபீல்டர்கள் வெளியே நிறுத்தப்பட்டதால் சற்று மெதுவாக விளையாடி அடுத்த 7 பந்துகளில் 8 ரன்களை எடுத்து 50 ரன்கள் தொட்டார்.

விராட் கோலியின் பதில்:
அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் அதிவேக ரயிலை போல தன்னுடைய இன்னிங்ஸை வேகமாக துவங்கிய விராட் கோலி 42 ரன்களை தொட்டதும் அரை சதமடிக்க வேண்டும் என்பதற்காக சற்று மெதுவாக விளையாடி 10 பந்துகளில் 50 ரன்களை எடுத்ததாக நேரலையில் விமர்சித்தார். குறிப்பாக விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் போது நீங்கள் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக விளையாட வேண்டும் என்று அவர் விராட் கோலியை விமர்சித்தது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

ஏனெனில் பொதுவாகவே ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி நன்கு செட்டிலான பின் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்ட விராட் கோலி வரலாற்றில் பலமுறை சாதனைகளுக்காக விளையாடாமல் இந்தியாவுக்காக விளையாடுவதை செயலால் நிரூபித்தவர். அதனால் உண்மை தெரியாமல் சதத்துக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று சமீபத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை விமர்சித்தது போலவே எங்களுடைய விராட் கோலி விமர்சிக்க வேண்டாம் என்று அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் டாப் ஆர்டரில் விளையாடினாலும் நங்கூரமாக நின்று ரன் குவிப்பதே என்னுடைய வேலை என்று சில நேரங்களில் மெதுவாக விளையாடுவதைப் பற்றி விராட் கோலி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் பவர் பிளே முடிந்ததும் வரும் தரமான பவுலர்களுக்கு மதிப்பளித்து சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடினால் எஞ்சிய போட்டியை எளிதாக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு.

Virat Kohli

“முக்கிய நேரங்களில் நங்கூரமாக செயல்படுவது அவசியமாகும். இருப்பினும் வெளியிலிருந்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் அது போன்ற சூழ்நிலைகளில் இருப்பதில்லை. மேலும் அவர்கள் போட்டியை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள்”

இதையும் படிங்க:IPL 2023 : 2000% அது நடக்கப்போறது உண்மை தான், தோனி பற்றி ரசிகர்கள் விரும்பாத தகவலை வெளியிட்ட கேதார் ஜாதவ்

“அதாவது ஆரம்பத்திலேயே நாங்கள் அதிரடியாக விளையாடுவதை பார்க்கும் அவர்கள் திடீரென்று பவர் பிளே முடிந்ததும் “என்னப்பா இவங்க அதிரடியை தொடராமல் ஸ்ட்ரைக் மாற்ற ஆரம்பித்து விட்டார்கள்” என்று நினைக்கிறார்கள். ஆனால் பொதுவாக பவர் பிளே ஓவர்களில் நீங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் இருக்கும் பட்சத்தில் அதில் வீசும் தரமான பவுலர்களுக்கு எதிரான முதல் 2 ஓவர்களில் எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பதை கண்டறிய வேண்டும். அப்போது தான் அந்த பவுலரின் கடைசி 2 ஓவரில் பெரிய ரன்களை குவிக்க முடியும். அது எஞ்சிய இன்னிங்ஸை மிகவும் எளிதாக்கும்” என்று கூறினார்.

Advertisement