வீடியோ : பெவிலியன் வழியில் இருந்த பாட்டிலை கையில் எடுத்து சென்ற விராட் கோலி – நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

Bottle
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து இந்த தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் போது கடைசி நாளில் இந்திய அணி சூப்பரான வெற்றி பெற்றது.

IND

- Advertisement -

அதன் பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோர் பெவிலியன் திரும்பினர். இந்நிலையில் அப்படி அவர்கள் இருவரும் வெளியில் பெவிலியனுக்கு திரும்பும் போது நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

மேலும் ஜோ ரூட்டை விட விராட் கோலி எப்படிப்பட்ட ஒரு மனிதர் என்பதையும் அந்த வீடியோ வெளிக்காட்டுகிறது என ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பவுண்டரி லைனை கடந்து செல்லும்போது பெவிலியனில் நடைபாதையில் இருந்த வாட்டர் பாட்டிலை பார்த்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் விலகி நடந்து சென்றார். ஆனால் அதே நேரத்தில் அந்த பாட்டிலை கவனித்த கோலி குனிந்து தனது கையில் அந்த வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஓய்வறையை நோக்கி சென்றார்.

- Advertisement -

நடைபாதையில் இருக்கும் வாட்டர் பாட்டிலை கண்டுகொள்ளாமல் சென்ற ரூட்டையும், அதனை கவனித்து எடுத்துச்சென்ற விராட் கோலியும் ஒப்பிட்டு ரசிகர்கள் சில கருத்துக்களையும் பகிர்ந்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் விராட் கோலியின் இந்த செயல் அவர் மீது உள்ள மரியாதையை இன்னும் அதிகப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.

களத்தில் ஆக்ரோஷமான வீரர் என்று பெயர் எடுத்த விராட் கோலி ரசிகர்களை நெகிழ வைக்கும் வண்ணம் பல விடயங்களை செய்துவருகிறார். அதில் இதுவும் ஒன்று என்று நாம் கூற வேண்டும்.

Advertisement