ஸ்பெஷல் பேட்’டையும் சேர்த்து அந்த பரிசு கொடுத்ததுக்கு நன்றி விராட் பையா.. ரிங்கு சிங் நெகிழ்ச்சி பதிவு

Rinku Singh
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளைப் பெற்று அசத்தி வருகிறது. குறிப்பாக பெங்களூருவுக்கு எதிராக நடந்த 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்றது. அதையும் சேர்த்து தொடர்ந்து 9 வருடமாக பெங்களூருவை அதனுடைய சொந்த ஊரான எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 6வது போட்டியில் வீழ்த்தி கொல்கத்தா சாதனை படைத்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 83* ரன்கள் எடுத்த உதவியுடன் 183 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய கொல்கத்தாவுக்கு பில் சால்ட் 30, சுனில் நரேன் 47, வெங்கடேஷ் ஐயர் 50, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39* ரன்கள் அடித்து 16.5 ஓவரிலேயே எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

விராட் கோலியின் பரிசு:
முன்னதாக அந்தப் போட்டி முடிந்ததும் கொல்கத்தா அணியை சேர்ந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்’கிற்கு ஜாம்பவான் வீரர் விராட் கோலி ஸ்பெஷல் பேட்டை பரிசாக கொடுத்து பாராட்டினார். அதை சிரித்த முகத்துடன் விராட் கோலியை கட்டியணைத்து ரிங்கு சிங் பெற்றுக் கொண்டார். கடந்த வருடம் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 5 சிக்சர்கள் அடித்த ரிங்கு சிங் கொல்கத்தாவுக்கு அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அதன் காரணமாக இந்திய அணிக்காகவும் அறிமுகமான அவர் இதுவரை களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் அழுத்தமான லோயர் ஆர்டரில் சிறந்த ஃபினிஷராக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதன் காரணமாக தோனி வரிசையில் இந்திய அணிக்கு மற்றுமொரு ஃபினிஷர் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் ரிங்குவை கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக நிரூபித்துள்ள அவருக்கு விராட் கோலி தனது ஸ்பெஷல் பேட்டை பரிசளித்தார். இந்நிலையில் பேட்டையும் சேர்த்து விராட் கோலி தமக்கு விலைமதிப்பில்லாத சில ஆலோசனைகளையும் கொடுத்ததாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பேட்டுக்காகவும் ஆலோசனைக்காகவும் மிகவும் நன்றி பையா. விராட் கோலி” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாண்டியாவிற்கு எதிரா யாரவது கத்தினா அவரை வெளியே அனுப்புங்க.. மும்பை அணி எடுத்துள்ள முடிவு – ரசிகர்கள் அதிருப்தி

அப்படி ரிங்குவை கட்டியணைத்து விராட் கோலி பேட்டை கொடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் வருங்காலத்தில் இந்தியாவுக்காக விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடுவதை பார்க்க காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். அந்த வாய்ப்பு 2024 டி20 உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு கிடைப்பதற்கான சூழல்களும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement